LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

எங்கே போகிறேன் நான்.. ? - வித்யாசாகர்

அதொரு கடலழிக்கும் காடு
காடெங்கும் தேவதைகள்
கடல்மறிக்கும் தேவர்கள்
தேவர்களின் காலடியில்
தேவதை பெற்றுப்போட்ட மிருகம் நான்;

வானெங்கும் நட்சத்திரம்
காடெங்கும் கர்ஜிக்கும் மிருகம்
வான்முட்டும் கட்டிடத்தின் கீழேயும் மேலேயும்
எங்கோ ஒருசிலராய் வாழும் கருப்பு வெள்ளை
மனிதர்கள்..

மனிதர்கள்
பெரிய மனிதர்கள்
இரண்டு கொம்பில்லை
பறக்க இறக்கையில்லை
மூக்கைப் பிடித்துநின்றால் சீவன் போகும்
ஆனாலும் மனிதத்தை
தொலைத்துவிட்டு தானென்று அகந்தையில்
ஆடும்
அழியும்
அட்டகாச மனிதர்கள்..

மிருகங்கள் கூடப் பாவம்
இயல்பை
ஏற்று நடக்கிறது
மனிதன்தான் இயல்பிற்கும் எதிராய் மாறும்
பெருத்த மிருகமாய்
சின்ன இதயமாய்
சிலிர்ப்போடு வாழ்கிறான்..

என்றாலும் -
இதயத்திற்கும் இங்கே பஞ்சமில்லை
துடித்தால் துடிக்கும்
அழுதால் அழும்
கொஞ்சினால் கொஞ்சும்
கொஞ்சினால் மட்டுமே கொஞ்சும்
சரியென்றும் தவறென்றும் நிறைய இதயங்கள்..

நஞ்சு கலந்து
நஞ்சு நிறைந்து
நஞ்சு அறுக்க
அறுபட்டு அறுபட்டு
ஐம்புலன் கட்டி
மிருகங்களுக்கு முன்னே தன்னை
பார் நான் மனிதன் எனும்
பெருமையோடு மட்டும் காட்டி கடக்க
நிறைய
இதயங்களுண்டு..

இதயத்தில் ஆசையும்
அறமும்
அச்சமும்
உண்மையும் பொய்யுமாய் நிறைய மனிதர்களுண்டு..

எல்லோரையும் அன்பினால்வளைத்து
வாஞ்சையோடு அனைத்துக் கொண்டேப்
போகிறேன்..

எங்கே போகிறேன் நான்?

யார் யாரோடோ
என்னென்னவோ பேசி
ஏதேதோ கேட்டு
எதற்கென்று முழு இலக்கு புரியாமல்
புரிந்தளவை தொடமுடியாமல்
தொடும்வரை அன்புசெய் அன்புசெய்
அன்புசெய்யெனும் ஞானத்தோடு மட்டும் -
நடப்பதையெல்லாம்
மறந்தும் மன்னித்தும்
மனிதத்தைத் தேடியும் மட்டுமே
ஓடிக்கொண்டேயிருக்கிறேன்..

இலக்கு எனக்குக் கிடைக்கையில் - எனது
இன்னொரு தலைமுறை நாளை
அவ்வழியே கடந்து
தனது வாழ்வை கம்பீரமாய் கண்ணியமாய் வாழ்ந்துமுடிக்குமென்று
நம்பிக்கை வருகிறது..
நம்பிக்கை வருகிறது..
நம்பிக்கை வருகிறது..

by Swathi   on 03 Mar 2015  1 Comments
Tags: வித்யாசாகர்   Vidyasagar   எங்கே போகிறேன்              
 தொடர்புடையவை-Related Articles
அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்! அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்!
மகளெனும் கடல்.. வித்யாசாகர்! மகளெனும் கடல்.. வித்யாசாகர்!
மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) - வித்யாசாகர்! மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) - வித்யாசாகர்!
குடியும் கோவில்வாசலும்.. - வித்யாசாகர் குடியும் கோவில்வாசலும்.. - வித்யாசாகர்
ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர் ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர்
உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்! உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்!
தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர் தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர்
ஒரு கண்ணாடி இரவில்.. - வித்யாசாகர்! ஒரு கண்ணாடி இரவில்.. - வித்யாசாகர்!
கருத்துகள்
04-Mar-2015 11:25:24 Thanmathi said : Report Abuse
Nice and very true
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.