LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

என்னைக் கொஞ்சம் உறங்க வைத்தால் ...

அவள்

 

காலை எழுந்தவுடன்

 

கைபேசியில்

 

பக்கத்து வீட்டு  

 

பள்ளித் தோழியிடம்

 

பேசினாள்....

 

நீண்ட நேரம்

 

பேசிய விசயம்

 

எல்லாமே பூஜ்யம்தான் !

 

 

 

அவன்

 

கைபேசியில்

 

கல்லூரி தோழனிடம்  

 

கிரிக்கெட் ஸ்கோர்

 

பேராசிரியர் பற்றி

 

நையாண்டிகள் !

 

 

 

காதலியிடம் பேசிய

 

காதல்மொழிகள்

 

கண்டு

 

களித்த நேரங்கள்

 

 

 

காதலியிடம்

 

கைபேசியில்

 

சிரித்தான் பாடினான்

 

மணிக்கணக்கில்

 

பேசிக்கொண்டே

 

கொஞ்சம் செல்லமாக

 

சண்டையுமிட்டான் !

 

 

 

அம்மா

 

கைபேசியில்

 

அடுத்ததெரு மாமியிடம்

 

மருமகள் புராணம் பாடி

 

அன்றைய சமையல்

 

மெகா சீரியல்  

 

பட்டுப்புடவை பார்டர்

 

அக்கம் பக்கம்

 

உள்ளவர்கள் பற்றி

 

வம்பு பேசியது வரை

 

அந்த கைபேசிக்கே

 

தொண்டை கட்டியது. 

 

 

 

அப்பா

 

கைபேசி மூலம்

 

தன் அலுவலக

 

பணியாளர்களுக்கு

 

வாழ்த்துகள் திட்டுக்கள்

 

ஆணைகள் பறந்தன !

 

 

 

கைபேசி

 

காலை மாலை

 

இரவிலும்

 

இடை விடாமல்

 

கை மாறிக்கொண்டே..

 

 

 

கைபேசியே

 

மனிதனிடம் பேசினால்

 

என்னைக் கொஞ்சம்

 

தூங்க வைத்தால்

 

வணங்குவேன் தாயே

 

நம்மிடம்

 

வேண்டிக் கொள்ளும் !

 

- பூ. சுப்ரமணியன்,  

 

பள்ளிக்கரணை,  சென்னை

 

 

by Subramanian   on 24 Jul 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.