LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

எதார்த்தம்

எதார்த்தம் ...

 

துயில் எழும்போது

வானத்தின்

கால்வாசியை

கடந்தது போயிருக்கும்

சூரியன் ...

 

எது நடந்தாலும்

உதடுவிட்டுப் பிரியாத

அந்த டீக்கடை டீயும்

தினத்தந்தி தமிழும் ..

 

பெரும்பாலும்

விரதம் உடைக்கிற

பதினெட்டு ரூபாய்

அளவுச் சாப்பாடு ..

 

அம்மா ..

அப்பா ..

தங்கை ...

நான் ...

 

தொலைபேசியோடு

மட்டுமே

குடும்பமாய் வாழுகிற

நாங்கள் ...

 

வந்தபோது மட்டுமே

வரவில் வைக்கப்

பழகிக்கொண்ட

சொந்த பந்தங்கள் ..

 

அதிசயமாய்

எங்கேனும்

எதிற்படுகிற

ஒரு சில “ மனிதர்கள் “ ..

 

அவர்களையும்

கலைத்து விடுகிற

காலம் ..

 

தாமரைஇலைத்

தண்ணீராய்

வாழச் சொல்லிக்கொடுக்கும்

வந்து போகும்

அனுபவங்கள் ...

 

வயதைக்

காரணமாக்கி

ஒதுக்கிவைத்தே

பழகுகிற

அண்டை அயலார்கள் ...

 

இயலாத

காலகட்டங்களில்

தாயின்பின் ஆழம்

உணர்த்துகிற

வாடகை மனிதர்கள் ...

 

எங்கு போனாலும்

என் தனிமை கண்டு

ஒவ்வொரு இரவும்

என்னை நலம்

விசாரிக்க வந்துவிடுகிற

நிலா ..

 

நானும்

சந்தோசமான

என் “ பேச்சிலர் “  வாழ்கையும் ....

 

-      குகன்

by Guhan   on 06 Dec 2011  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
16-Oct-2014 13:58:01 நரேந்திரன் said : Report Abuse
எதார்த்த வாழ்க்கையை மிக எதரமான வரிகளில் பதிவு செய்தது அருமை.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.