LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

எதிலும் இலவசம் வேண்டாம்

பிறகு என் கணவர் மத்திய அரசுப் பணிக்காக , மைய அரசு பொதுப் பணியாளர் தேர்வு ஆணையம் ( யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ) நடத்திய தேர்வில் வெற்றி பெற்றார் . அதனால் , மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறையில் உதவிப் பொறியாளராக என் கணவருக்கு உயர் பதவி கிடைத்தது .

1967 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய தோல்வி , திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சியைப் பிடித்தது . அதன் விளைவாக என் தந்தையார் அமைச்சர் பதவியை இழக்க நேர்ந்தது . அந்தச் சமயத்தில்தான் என் கணவருக்கு மத்திய அரசின் கப்பல் துறையில் உயர் பதவிக்கு உரிய ஆணை கிடைத்தது .

அந்தமான் தீவில்தான் என் கணவர் உதவிப் பொறியாளர் வேலையில் சேர்வதற்குப் புறப்பட்டார் . என்னையும் அழைத்துச் சென்றார் . என்னைப் பிரிவதற்கோ என் அப்பாவுக்கு மனம் இல்லை .

‘நீங்கள் அந்தமான் போய்த்தான் ஆக வேண்டுமா ?’ என்று நெகிழ்ச்சியோடு கேட்டார் . என் எண்ண ஓட்டத்தை என்னால் மறைக்க முடியவில்லை .

‘அப்பா ! நீங்கள் என் கணவருக்கு மாநில அரசிலேயே பதவி உயர்வு ( புரமோஷன் ) வாங்கித் தரவில்லை . வந்திருக்கிற மத்திய அரசு வேலையை அவரால் விடமுடியாது . அதனால்தான் , இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் அந்தமான் போகிறோம்” என்று கவலையை மனத்தில் தேக்கிக்கொண்டு தந்தைக்குப் பதில் கூறினேன் .

‘நீ சொல்வதும் சரிதாம்மா !’ என்று சொன்ன அவர் , ஓர் அறிவுரையையும் கூறினார் :

‘உன் கணவரின் அனுமதி இல்லாமல் எந்தப் பொருளையும் நீ அன்பளிப்பாக வாங்கவோ , கொடுக்கவோ கூடாது . காய்கறி , பழம் உள்பட எதுவாக இருந்தாலும் இலவசமாக வாங்கவே கூடாது !’ என்றார் .

“தேவையில்லாமல் பொருட்களை வாங்கிக் குவிக்கதீ ‘a3 ர்கள் . பிறகு சில நேரங்களில் தேவையானதை விற்க நேரிடும்” .

– எடிசன்

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.