LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

எதிரியும் பாராட்டும் பண்பாளர்

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வெற்றிகரமாக முடிந்த நிலையில் பிரதமர் இந்திரா காந்தி 1970 ஆம் ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத்தைக் கலைத்தார் . அதனால் , 1971 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குப் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய நிலை உருவானது . ‘ காங்கிரஸ் - ஓ’ தனித்துப் போட்டியிடத் தீர்மானித்தது . பெருந்தலைவரின் கட்டளைக்கு இணங்க 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ‘ஸ்ரீபெரும்புதூர்’ நாடாளுமன்றத் தொகுதியில் ‘ஸ்தாபன காங்கிரஸ்’ சார்பாகக் கக்கன் வேட்பாளராக நின்றார் . அப்போது தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது . இந்திரா காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்திருந்தன . ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் அடங்கி இருந்தன . அவற்றுள் ஒன்று பரங்கி மலைத் தொகுதி . இந்தப் பொதுத் தேர்தலில் எம் . ஜி . ஆர் , திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற வேட்பாளராகப் பரங்கிமலைத் தொகுதியில் நின்றார் .

இந்திய நாட்டில் எவருக்கும் கிடைக்காத அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இவருக்கு இருந்தது . ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கக்கன் , பரங்கிமலைத் தொகுதியில் மிகப்பெரிய வரவேற்பை மக்களிடம் பெற்றிருந்த எம் . ஜி . ஆரை எதிர்த்துத் தேர்தல் பிரச்சாரம் செய்தார் . மற்றவர்களைப் போல் இல்லாமல் கக்கன் , தமக்கே உரித்தான பண்பு நிறைந்த பாணியில் எதிர்க்கட்சி வேட்பாளரை விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தார் . இதை வெற்றிபெற்ற வேட்பாளரான எம் . ஜி . ஆரும் பாராட்டிப் பேசினார் . எனினும் தி . மு . க . ‘ காங்கிரஸ் - ஐ’க்கு ஆதரவு அளித்ததால் , அந்த வேட்பாளரே வெற்றிபெற்றார் . கக்கன் வெற்றி வாய்ப்பை இழந்தார் . அகில இந்திய அளவில் நாடாளுமன்றத் தேர்தலில் ‘காங்கிரஸ் - ஐ’ அதிகமாக வெற்றி பெற்று , நாடாளுமன்றத்தின் மிகப்பெரிய பெரும்பான்மையைப் பெற்றது . இந்திரா காந்தி மத்தியில் ஆட்சி அமைத்தார் . தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் தி . மு . க . விற்குப் பெரும்பான்மை கிடைத்ததனால் மு . கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்தது

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.