LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

எதுவும் எனக்கு சொந்தமில்லை!

ஏழரை ஏக்கர் எனக்கு சொந்தமென்று

சொன்னவனுக்கு!,புதைக்க,

ஆறடி நிலம் கூட அவசியம் இல்லை

என்று எரித்து!

ஒரு குடுவையில் சாம்பலை கொடுத்துவிட்டார்கள்.

அதைக்கூட ஆற்றில் விட்டு விட்டு

அதுவும் எனக்கு சொந்தமில்லை

என்று விட்டு விட்டார்கள்.

உயிருக்கே பட்டா போட முடியாத

நாம் நிலத்துக்கு பட்டா போட்டாலும்

நிலம் வாய் திறந்து இவன் எனக்கு

சொந்தம் என்று சொல்வதில்லை!.

மனிதனுக்கு மனிதன் வாய் வார்த்தை

நம்பாமல் வளைவு கோடு போட்டு

இந்த நிலத்தை பட்டா கேட்டு

எழுதி வாங்கிக்கொள்கிறான்.

ஒரு ஆச்சர்யம்! எழுதிக்கொடுத்தவனுக்கும்,

சாட்சியாய் நிற்கும் அரசாங்கத்துக்கும்

கூட எதுவும் சொந்தமில்லை!.

மனிதன் மட்டுமல்ல உலகில் உள்ள

ஜீவராசிகள் அனைத்துக்கும்,

எதுவும் சொந்தமில்லை!இயற்கையின்

படைப்பில் உருண்டையான பூமி கூட

உலகத்திற்கு சொந்தமில்லை,

நீர், காற்று,நெருப்பு, மூன்றும்,

நினைத்தபோது நினைத்தவாறு மாற்றிவிடும்

இந்த பூமியே, தான் இந்த உலகத்திற்கு

சொந்தம்தானா? என சந்தேகப்படும்போது

நம்மை போன்ற உயிரினங்களுக்கு

எதுவும் சொந்தமில்லை!.

Ethuvum enakku sonthamillai
by Dhamotharan.S   on 22 Jan 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.