LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

யோசித்துப் பார் !

ஆடும் மயிலோடு

உனக்கு கோபம் என்றால்

ஆந்தையிடம் போய்

அழகைப் பற்றி

பேச நினையாதே !

 

துன்பங்கள் உன்னை

துரத்தி வந்தால்

துவண்டு போய்

சாவிடம் சென்று

நீ சரணடைந்து விடாதே !

 

கடல் அலைகளிடம்

நீ தோற்றுவிட்டால்

சாக்கடை நீரோட

சேர்ந்து கொண்டு

குதித்து  

கும்மாளமிடாதே!

 

நறுமணம் வீச

முடியவில்லை

என்பதற்காக

நீ மணமிக்க

மலர்கள் மீது

சகதியை வீசாதே !

 

சூரியன் சுடுகிறான்

என்று வெறுத்து

இரவின் கன்னத்திலா

முத்தமிட்டுக் கொண்டிருப்பாய் ?

 

எதையும் நீ

அவசரமாக யோசித்து

தாமதத்திடம் சென்று

தஞ்சம் அடையாதே !

 

வாசிப்பதை மறந்தாலும்

இவையெல்லாம் பற்றி

நீ யோசிப்பதை

மறந்து விடாதே !

பூ. சுப்ரமணியன்,

பள்ளிக்கரணை, சென்னைஆடும் மயிலோடு

உனக்கு கோபம் என்றால்

ஆந்தையிடம் போய்

அழகைப் பற்றி

பேச நினையாதே !

 

துன்பங்கள் உன்னை

துரத்தி வந்தால்

துவண்டு போய்

சாவிடம் சென்று

நீ சரணடைந்து விடாதே !

 

கடல் அலைகளிடம்

நீ தோற்றுவிட்டால்

சாக்கடை நீரோட

சேர்ந்து கொண்டு

குதித்து  

கும்மாளமிடாதே!

 

நறுமணம் வீச

முடியவில்லை

என்பதற்காக

நீ மணமிக்க

மலர்கள் மீது

சகதியை வீசாதே !

 

சூரியன் சுடுகிறான்

என்று வெறுத்து

இரவின் கன்னத்திலா

முத்தமிட்டுக் கொண்டிருப்பாய் ?

 

எதையும் நீ

அவசரமாக யோசித்து

தாமதத்திடம் சென்று

தஞ்சம் அடையாதே !

 

வாசிப்பதை மறந்தாலும்

இவையெல்லாம் பற்றி

நீ யோசிப்பதை

மறந்து விடாதே !

பூ. சுப்ரமணியன்,

பள்ளிக்கரணை, சென்னை

by Subramanian   on 02 Nov 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.