LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நாடாளமன்ற தேர்தலில் பண புழக்கத்தை தடுக்க - கிராமங்கள் தோறும் இளைஞர்கள் குழு !!

நாட்டிலேயே முதன் முறையாக தமிழகத்தில் வரும் நாடாளமன்ற தேர்தலில் ஓட்டுப் போட, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை தடுக்க கிராமங்கள்தோறும், தன்னார்வ இளைஞர்களைக் கொண்ட, "கிராமக் குழு" அமைக்கும்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 


இதுகுறித்து தேர்தல் செலவின பொது இயக்குனர் தாஸ், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் ஆகியோர் கூறியதாவது: ஓட்டு போட அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை தடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். தென் மாநிலங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடக, புதுச்சேரியில், அதிக அளவில், ஓட்டு போட பணம் வழங்கப்படுகிறது; கேரளாவில், இந்த கலாசாரம் இல்லை. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை, தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. தமிழகத்தில், முதன் முறையாக, கிராமங்கள்தோறும் "கிராமக் குழு" அமைக்கும்படி, கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். கிராமக் குழுவில் அரசியல் கட்சி சாராத, தன்னார்வ இளைஞர்கள் இடம் பெறுவர். அவர்கள் ஓட்டுப்போட வேண்டியதன் அவசியம் குறித்து, மக்களிடம் எடுத்துரைப்பர். அத்துடன் ஓட்டுக்கு பரிசு வழங்கப்படுவதை, தடுத்து நிறுத்துவர். இப்பணியில், கிராமக்குழு இளைஞர்களும் ஈடுபடுத்தப்படுவர். மாவட்டம் தோறும் இலவச டெலிபோன் எண் ஏற்படுத்தப்படும். அதில், பொதுமக்கள் புகார் செய்தால், 24 மணி நேரத்திற்குள், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

by Swathi   on 16 Feb 2014  0 Comments
Tags: தேர்தலில் பண புழக்கம்   பண புழக்கம்   Vigilance Committee   Election Commission   இளைஞர்கள் குழு   கிராம இளைஞர்கள் குழு     
 தொடர்புடையவை-Related Articles
லோக் சபா தேர்தலில் வாக்களிக்க கூடுதலாக இரண்டு மணிநேரம் அதிகரிப்பு !! லோக் சபா தேர்தலில் வாக்களிக்க கூடுதலாக இரண்டு மணிநேரம் அதிகரிப்பு !!
நாடாளமன்ற தேர்தலில் பண புழக்கத்தை தடுக்க - கிராமங்கள் தோறும் இளைஞர்கள் குழு !! நாடாளமன்ற தேர்தலில் பண புழக்கத்தை தடுக்க - கிராமங்கள் தோறும் இளைஞர்கள் குழு !!
இணையதளங்களில் தேர்தல் பிரச்சாரம் : புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் !! இணையதளங்களில் தேர்தல் பிரச்சாரம் : புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.