1. இசை ஒரு தனிக் கலை.
1.2 நவீன கால இசை உலகம்
ஒலி உருவாக்கப்படுவதற்கு முன்னர் நாம் சொன்ன காரணங்கள் இப்போதைய நவீன காலத்தில் பழையதாகிவிட்டது. இருபத்தியிரண்டாம் நூற்றாண்டில் நிலைமையே மாறிவிட்டது. மின்சக்தியில் இயங்குகின்ற மின்னணுச்சக்திக்கருவிகள் இன்று ஒலிச்சிதறல்களைத் தனக்குள்ளேயே வைத்துள்ளன. மனிதன் இதுவரை கேட்டிராத ஒலிகளும் இதில் அடங்கியுள்ளன.
கம்ப்யூட்டர் எனப்படுகின்ற கணிணிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அக்கணிணிகள் பல்வேறு வகையான ஒலிகளை உருவாக்குவதோடு, நாம் கேட்பதற்கேற்ப இசைத்துணுக்குகளையும், இசைக்கோர்வைகளையும், இசைத்தொகுப்புகளையும் கூட உருவாக்கித் தந்துவிடுகின்றன. காற்று, கடல், மழை, மரங்களின் அசைவு, நீர்வீழ்ச்சி போன்ற பலவகையிலான இயற்கையின் பேரோசைகளை யெல்லாம் கணிணி தனக்குள் ஒலிச்சிதறல்களாக சேகரித்து வைத்துக் கொண்டுள்ளது.
அந்த ஒலிச்சிதறல்களை ஒழுங்குபடுத்தி இவ்வாறான இசைக்கோர்வையைத்தா என்று கணிணியிடம் கட்டளையிட்டால் அவ்வாறே அதைக் கணிணி இசைத்துக் கொடுத்துவிடுகிறது. அதுமட்டுமல்ல, கேட்ட மாத்திரத்திலேயே செவிப்பறையைத் துளைபோடும் அளவிற்கான பேரொலியையும் கணிணிகளால் ஒலிக்க இயலும். இசைக்கருவிகளும், இசைக்கருவிகள் வாசிப்பவர்களும், இனிமேல் தேவையில்லை என்றிருக்கும் காலம் வந்துவிடுமோ என்கிற எண்ணம் நவீன கால இசை உலகத்தில் உருவாகியுள்ளது.
|