LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கஜா புயலால் 1 லட்சம் வாழைகள் சேதம்!

கஜா புயலால் 1 லட்சம் வாழைகள் சேதம் அடைந்தன.

திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி, கோவில்பட்டி, துவரங்குறிச்சி, மருங்காபுரி, புத்தாநத்தம் உள்ளிட்ட பல இடங்களில் கஜாபுயல் கரையை கடந்த வேளையில் கனமழை பெய்தது. அதன் பின்னர் பேய்க் காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

 மணப்பாறை நகரில் பலத்த சூறைக்காற்றுக்கு பல வீடுகளின் மேல் மரங்கள் சாய்ந்தன. வெள்ளக்கல் - கோவில்பட்டி ரோட்டில் மஸ்தான் தெரு உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து வீடுகளின் மேல் விழுந்துள்ளன. மருங்காபுரி பகுதியில் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன.  

திருச்சி - மணப்பாறை மெயின்ரோட்டில் செல்போன் டவர் காற்றில் சாய்ந்தது. முசிறி, தொட்டியம் , தா.பேட்டை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் காற்றுடன் சேர்ந்த மழையால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து உள்ளன.

 இதனால் போக்குவரத்து பல பகுதிகளில் தடைப்பட்டது. இதனால் வேலைக்கு செல்லும் கட்டிட தொழிலாளர்கள் பலரின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சூறைக் காற்றுக்கு கடைகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர போர்டுகள், சாலையில் வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் போர்டுகள், பேரிகார்டுகள் காற்றில் பறந்தன.

லால்குடி, அந்தநல்லூர், மணிகண்டம், தொட்டியம், மண்ணச்சநல்லூர்,  திருவெறும்பூர் ஒன்றியங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பலத்த சூறைக்காற்றுக்கு 1 லட்சம் வாழைகள் சாய்ந்தன. இதில் அதிகபட்சமாக லால்குடியில் 2 ஆயிரம் வாழைகள் முற்றிலும் சேதமாயின.  

திருச்சி வயலூர், குழுமணி, பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், அல்லூர், ஆகிய பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் அதிவேக காற்றினாலும், கனமழையினாலும் சாய்ந்தன. 

திருவெறும்பூர் அடுத்த கிளிக்கூடு, உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்ச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. சூறைக்காற்றுக்கு 100 ஏக்கர் முற்றிலும் வேரோடு சாய்ந்தன.  

திருவானைக்காவல் - கல்லணை ரோட்டில் பழமையான மரங்கள் காற்றில் ரோட்டில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  நெடு்ஞ்சாலைத்துறையினர் ரோட்டில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

இதே போல் தில்லைநகர், மன்னார்புரம், கருமண்டபம், ஸ்ரீரங்கம், எடமலைப்பட்டிபுதூர், பொன்மலைப்பட்டி பழைய ரயில்வே குடியிருப்பு மற்றும் சுற்றுலா மாளிகையில் மரங்கள் சாய்ந்தன. மரங்கள் விழுந்த சமயத்தில் ஆட்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

காற்றின் வேகத்தில் மாவட்டத்தின் பல இடங்களில் வீடுகளில் மேல் மரங்கள் விழுந்து சாய்ந்து கிடக்கின்றன.  மாவட்டத்தில்  பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் தடை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வி்டப்பட்டிருந்தது.

திருச்சி - கரூர் ரயில் வழித்தடத்தில் மின்சாரம் தடை பட்டதால் திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் மற்றும் கரூர் - திருச்சி இடையேயான பயணிகள் ரயில் நடுவழியில் மணி கணக்கில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். 

மணப்பாறை அருகே இளங்காகுறிச்சி என்ற இடத்தில் மின் கம்பி அறுந்ததால் மதுரை - சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வையம்பட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதே போல் டி கார்டன் எக்ஸ்பிரஸ் ரயில் பெருகமணியிலும், கரூர் - திருச்சி பயணிகள் ரயில் பெட்டவாய்த்தலையிலும் நிறு்த்தப்பட்டது.

by Mani Bharathi   on 17 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.