இணையத்தில் தானாகப் பட்டா மாறுதல் திட்டம்
தமிழக அரசு கடந்த 2018ம் ஆண்டு ஸ்டார் 2. மென்பொருள் திட்டத்தைப் பட்டா மாறுதல் மற்றும் பத்திரப்பதிவு ஆகிய வசதிகளை எளிமைப்படுத்துவதற்காகக் கொண்டு வந்தது. அதன்படி முற்றிலும் இணையவழியாகப் பட்டா மாற்றம் மேற்கொள்ளப்படுவதை நடைமுறைப்படுத்திட அரச ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்பதிவகங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரம்பூர், கரூர், திண்டுக்கல், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட 10 மாவட்டங்கில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, பதிவுத்துறைத் தலைவர் அனைத்து மாவட்ட சார்பதிவாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
|