வரும் 2020ம் ஆண்டுக்குள், இந்தியாவின் சிறிய நகரங்களும் விமான சேவையை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஆஜ்மீர் மாவட்டத்தில், கிஷன்கர் விமான நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங், "சிறிய நகரங்களும் விமான சேவையை பெற வேண்டும் என்ற தொலைநோக்கோடு, மத்திய அரசு 100 புதிய விமான நிலையங்களை உருவாக்க திட்டமிடப்படப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் 2020ம் ஆண்டுக்குள், இந்தியாவின் சிறிய நகரங்களும் விமான சேவையை பெரும்.இத்திட்டத்தின் முதற்கட்டமாக கிஷன்கர் விமான நிலையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
|