LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ம.பி கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலி : நான்கு அதிகாரிகள் சஸ்பென்ட் !!

மத்திய பிரதேச மாநிலம், துர்க்கா கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் உயிரிழந்ததை  அடுத்திய தாட்டியா மாவட்ட ஆட்சியர் உட்பட நான்கு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


மத்திய பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தில் ரத்தன்கர் என்ற பகுதியில் உள்ள துர்கா தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாலத்தில், நேற்று முன்தினம் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் 115 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அம்மாநில அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தாட்டியா பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இந்த அசம்பாவித சம்பவத்திற்கு, மாவட்ட ஆட்சியர் சாங்கெட் போந்த்வி, காவல் கண்காணிப்பாளர் சோலங்கி, மஹிப் தேஜஸ்வி, துணை பிரிவு காவல்துறை அதிகாரி பாசவி ஆகியோரே காரணம் என்பது தெரிய வந்தததாக சவுகான் தெரிவித்தார்.  இதனையடுத்து, அந்த நான்கு பேரையும் பணியிடை நீக்கம் செய்வதற்கு மத்திய பிரதேச மாநில அரசு பரிந்துரை செய்தது. மத்திய பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று அவர்கள் 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

by Swathi   on 14 Oct 2013  0 Comments
Tags: 4 Officers Suspended   மத்திய பிரதேசம்   கூட்ட நெரிசல்   சஸ்பென்ட்   MP stampede        
 தொடர்புடையவை-Related Articles
வேலை நேரத்தில் அரசு ஊழியர்கள் இருக்கையில் இல்லாதிருந்தால் சஸ்பென்ட் !! வேலை நேரத்தில் அரசு ஊழியர்கள் இருக்கையில் இல்லாதிருந்தால் சஸ்பென்ட் !!
ம.பி கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலி : நான்கு அதிகாரிகள் சஸ்பென்ட் !! ம.பி கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலி : நான்கு அதிகாரிகள் சஸ்பென்ட் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.