இந்திய மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ், இடங்களை கூடுதலாக்குவது குறித்து ஆலோசிப்பதற்கான, இந்திய மருத்துவ கவுன்சிலின் கூட்டம், நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 32 அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., சீட்டுகளின் எண்ணிக்கையை 1,390 கூடுதலாக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த சீட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், இந்த எண்ணிக்கை உயர்வு நடப்பு கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அரசு மருத்துவ கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ் சீட்டுக்கான எண்ணிக்கை 46,500 ஆகா உயர்ந்துள்ளது.
|