LOGO
  முதல் பக்கம்    அரசியல்    தேர்தல் Print Friendly and PDF

1937 முதல் 1945 வரை தேர்தல்

 

தொகுதிகள்:1937இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணம், தற்கால தமிழ் நாடு, தெலுங்கானா தவிர்த்த ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் மாவட்டம், 
கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாக இருந்தது. இந்திய அரசாங்கச் சட்டம், 1935 இன் படி, சென்னை மாகாண 
சட்டமன்றத்தில் இரு அவைகள் இருந்தன. அசம்பிளி என்றழைக்கப்பட்ட கீழவையில் 215 உறுப்பினர்களும், கவுன்சில் என்றழைக்கப்பட்ட மேலவையில் 54 
முதல் 56 உறுப்பினர்களும் இருந்தனர். இவர்களுள் கீழவையின் அனைத்து உறுப்பினர்களும், மேலவையின் 46 உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் 
தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொகுதிகளுள் முஸ்லீம்கள், தலித்துகள்., ஐரோப்பியர், பெண்கள், ஜமீன்தார்கள், வணிகர் மற்றும் தொழில் முனைவோர், இந்திய 
கிருத்துவர்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய பிரிவினருக்கு வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு இருந்தது. மக்கள் அனைவரும் வாக்குரிமை 
பெற்றிருக்கவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப் பட்டது. முக்கிய கட்சிகள்: 
சென்னை மாகாணத்தில் அப்போது இரு முக்கிய கட்சிகள் இருந்தன – இந்தியாவிற்கு சுதந்திரம் அல்லது சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்று கோரிய 
இந்திய தேசிய காங்கிரசு, மற்றும் பிராமணரல்லாதோர் நலனுக்காகத் தொடங்கப் பட்ட நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். 
தேசியவாதக் கட்சியான காங்கிரசு, இரட்டை ஆட்சி முறையில் இந்தியர்களுக்கு வழங்கப் பட்ட அரசியல் உரிமைகளால் திருப்தி அடையவில்லை. எனவே 
தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தது. ஆனால் காங்கிரசின் ஒரு பிரிவினர் அதை ஏற்காமல் 1922 இல் தனியே பிரிந்து சென்று சுவராஜ் (சுயாட்சி) 
கட்சி என்ற பெயரில் தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர். தமிழகத்தில் சீனிவாச சாஸ்திரி, சத்தியமூர்த்தி ஆகியோர் சுயாட்சி கட்சிக்கு 
தலைமை வகித்தனர். நாளடைவில் இருபிரிவினருக்குள் இருந்த வேறுபாடுகள் குறைந்தன. தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலை எடுக்கப்பட்டது. 1935ல் 
சுயாட்சிக் கட்சி காங்கிரசுடன் அதிகாரபூர்வமாக இணைந்து விட்டது.1930-34 இல் பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் 1934 இல் 
சரியானது. கம்யூனிஸ்டுகளுடன் நெருக்கம் காட்டி வந்த பெரியார், கம்யூனிஸ்ட் கட்சி 1934 இல் தடை செய்யப்பட்டதாலும், அரசு தந்த நெருக்கடிகளாலும், 
வெளிப்படையான பொதுவுடமைக் கொள்கையை கைவிட்டு நீதிக்கட்சியுடன் மீண்டும் நெருக்கமானார்.யு. ராமா ராவ்:ராமா ராவ் ஒரு மருத்துவர். டாக்டர் டி. 
எம். நாயருடன் இணைந்து ஆண்டிசெக்ப்டிக் என்ற மருத்துவ ஆய்விதழை நடத்தியவர். இந்திய மருத்துவ சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான இவர் 
பின்னாளில் அதன் தலைவராகவும் பணியாற்றினார். சென்னை மாநகராட்சி உறுப்பினராகப் பணியாற்றி பின் 1927 இல் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரானார். 
1935 இல் சென்னை சங்கீத அகாதமியை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய இவர் பின் அதன் தலைவராகப் பணியாற்றினார். பிரித்தானிய இந்தியாவின் 
நடுவண் நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1937-45 காலகட்டத்தில் சென்னை மாகாண நாடாளுமன்ற 
மேலவைத் தலைவராகப் பதவி வகித்தார்.

தொகுதிகள்:

 

     1937இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணம், தற்கால தமிழ் நாடு, தெலுங்கானா தவிர்த்த ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாக இருந்தது. இந்திய அரசாங்கச் சட்டம், 1935 இன் படி, சென்னை மாகாண சட்டமன்றத்தில் இரு அவைகள் இருந்தன. அசம்பிளி என்றழைக்கப்பட்ட கீழவையில் 215 உறுப்பினர்களும், கவுன்சில் என்றழைக்கப்பட்ட மேலவையில் 54 முதல் 56 உறுப்பினர்களும் இருந்தனர். இவர்களுள் கீழவையின் அனைத்து உறுப்பினர்களும், மேலவையின் 46 உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொகுதிகளுள் முஸ்லீம்கள், தலித்துகள்., ஐரோப்பியர், பெண்கள், ஜமீன்தார்கள், வணிகர் மற்றும் தொழில் முனைவோர், இந்திய கிருத்துவர்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய பிரிவினருக்கு வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு இருந்தது. மக்கள் அனைவரும் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப் பட்டது.

 

முக்கிய கட்சிகள்:

 

      சென்னை மாகாணத்தில் அப்போது இரு முக்கிய கட்சிகள் இருந்தன.இந்தியாவிற்கு சுதந்திரம் அல்லது சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்று கோரிய இந்திய தேசிய காங்கிரசு, மற்றும் பிராமணரல்லாதோர் நலனுக்காகத் தொடங்கப் பட்ட நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். தேசியவாதக் கட்சியான காங்கிரசு, இரட்டை ஆட்சி முறையில் இந்தியர்களுக்கு வழங்கப் பட்ட அரசியல் உரிமைகளால் திருப்தி அடையவில்லை. எனவே தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தது. ஆனால் காங்கிரசின் ஒரு பிரிவினர் அதை ஏற்காமல் 1922 இல் தனியே பிரிந்து சென்று சுவராஜ் கட்சி என்ற பெயரில் தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர்.

 

     தமிழகத்தில் சீனிவாச சாஸ்திரி, சத்தியமூர்த்தி ஆகியோர் சுயாட்சி கட்சிக்கு தலைமை வகித்தனர். நாளடைவில் இருபிரிவினருக்குள் இருந்த வேறுபாடுகள் குறைந்தன. தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலை எடுக்கப்பட்டது. 1935ல் சுயாட்சிக் கட்சி காங்கிரசுடன் அதிகாரபூர்வமாக இணைந்து விட்டது.1930-34 இல் பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் 1934 இல் சரியானது. கம்யூனிஸ்டுகளுடன் நெருக்கம் காட்டி வந்த பெரியார், கம்யூனிஸ்ட் கட்சி 1934 இல் தடை செய்யப்பட்டதாலும், அரசு தந்த நெருக்கடிகளாலும், வெளிப்படையான பொதுவுடமைக் கொள்கையை கைவிட்டு நீதிக்கட்சியுடன் மீண்டும் நெருக்கமானார்.யு.

 

ராமா ராவ்:

 

     ராமா ராவ் ஒரு மருத்துவர். டாக்டர் டி. எம். நாயருடன் இணைந்து ஆண்டிசெக்ப்டிக் என்ற மருத்துவ ஆய்விதழை நடத்தியவர். இந்திய மருத்துவ சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான இவர் பின்னாளில் அதன் தலைவராகவும் பணியாற்றினார். சென்னை மாநகராட்சி உறுப்பினராகப் பணியாற்றி பின் 1927 இல் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரானார். 1935 இல் சென்னை சங்கீத அகாதமியை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய இவர் பின் அதன் தலைவராகப் பணியாற்றினார். பிரித்தானிய இந்தியாவின் நடுவண் நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1937-45 காலகட்டத்தில் சென்னை மாகாண நாடாளுமன்ற மேலவைத் தலைவராகப் பதவி வகித்தார்.

by Swathi   on 24 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
2016 சட்டசபை தேர்தலில் கலந்துகொண்ட கட்சிகளின் நிலவரம் 2016 சட்டசபை தேர்தலில் கலந்துகொண்ட கட்சிகளின் நிலவரம்
2001 Census Population Distrcit Level with SC/ST 2001 Census Population Distrcit Level with SC/ST
2016 - சட்டசபை தேர்தல் தொகுதிகள் -மாவட்டங்கள் -வெற்றிபெற்ற வேட்பாளர்கள்- கட்சிகள் 2016 - சட்டசபை தேர்தல் தொகுதிகள் -மாவட்டங்கள் -வெற்றிபெற்ற வேட்பாளர்கள்- கட்சிகள்
பெண் வேட்பாளர்கள் -2016 சட்டசபை தேர்தல் பெண் வேட்பாளர்கள் -2016 சட்டசபை தேர்தல்
பட்டப்படிப்பு அல்லது மேல்படிப்பு படித்த வேட்பாளர்கள் (2016 Election) பட்டப்படிப்பு அல்லது மேல்படிப்பு படித்த வேட்பாளர்கள் (2016 Election)
Tamil Nadu Election Summary (2016) Tamil Nadu Election Summary (2016)
தமிழகத்தின் கிராம நகர வாரியான மக்கள்தொகை விவரம் - population censes by cities and Towns of TN தமிழகத்தின் கிராம நகர வாரியான மக்கள்தொகை விவரம் - population censes by cities and Towns of TN
தமிழகத்தின் மாவட்டவாரியான மக்கள்தொகை-  District wise Population of TN தமிழகத்தின் மாவட்டவாரியான மக்கள்தொகை- District wise Population of TN
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.