|
|||||
1952 முதல் 1964 வரை அரசியல் |
|||||
தொகுதிகள்:1952 இல் சென்னை சட்டமன்றத்தில் மொத்தம் 375 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 309 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அப்போது இரட்டை உறுப்பினர் முறை வழக்கில் இருந்ததால் 66 தொகுதிகள் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தன. இவற்றுள்
62 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவருக்கும் நான்கு தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. இரட்டை உறுப்பினர் தொகுதிகள், இந்திய
அரசியலமைப்புச் சட்டத்தின் 332 ஆவது உட்பிரிவின்படி உருவாக்கப்பட்டன. உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950
இல் விவரிக்கப் பட்டிருந்தது. மாற்றங்கள்:1 அக்டோபர் 1953-இல் தனி ஆந்திர மாநிலம் உருவானது. 30 செப்டம்பரில் ஆந்திர அமைச்சர்கள் பதவி விலகினர்.
அவர்களுக்குப் பதில் பக்தவத்சலத்திடம் விவசாயம், வனங்கள், மீன்வளம், கிராம நலன் துறைகள் ஒப்படைக்கப் பட்டன. ஜோதி வெங்கடாசலம் மதுவிலக்கு
மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சரானார்.தாக்கம்:1957-இல் நடைபெற்ற அடுத்த தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு பொறுப்பேற்று காமராஜர் மாநில
காங்கிரசு குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகினார். அவருக்கு பதில் ப. சுப்பராயன் தலைவரானார்.[23] ராஜகோபாலாச்சாரி மேலவையில்
உறுப்பினராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரமான பி. ராமமூர்த்தி சென்னை
உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அரசியலமைப்புச் சட்டதின் கூறியுள்ளபடி ஒருவரை மேலவைக்கு ஆளுனர் நியமிக்கும் முன்
அமைச்சரவையின் பரிந்துரை வேண்டும். ஆனால் பிரகாசா ராஜகோபாலாச்சாரியை நியமிக்கும் போது அமைச்சரவை அமைக்கப்படவில்லை. எனவே அந்த
நியமனம் செல்லாது என்பது அவரது வாதம். அவரது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பி. வி. ராஜமன்னார் மற்றும் நீதிபதி வெங்கடராம அய்யர்
இத்தகைய விஷயங்களில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று தீர்ப்பளித்து தள்ளுபடி செய்தனர்.இச்செயல் பிற்காலத்தில் மத்தியில் ஆளும் கட்சிக்கு
ஆதரவாக மாநில ஆளுநர்கள் செயல்பட ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்தது. 1962ம் ஆண்டு தொகுதிகள்:1962 இல் சென்னை மாநிலம்
என்றழைக்கப்பட்ட தமிழ் நாட்டில் மொத்தம் 206 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 167 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 38 தனித்
தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 37 தாழ்த்தப்பட்டவருக்கும் 1 பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன.அரசியல் நிலவரம்: 1961
இல் திமுக வின் தலைவர்களுள் ஒருவரான் ஈ. வெ. கி. சம்பத் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் தேசியக் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
அவருடன் நடிகர் சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். ஆட்சி அமைப்பு:காங்கிரசு தனிப்பெரும்பான்மை பெற்று,
காமராஜர் மூன்றாம் முறை முதல்வரானார்.
தொகுதிகள்:
1952 இல் சென்னை சட்டமன்றத்தில் மொத்தம் 375 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 309 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது இரட்டை உறுப்பினர் முறை வழக்கில் இருந்ததால் 66 தொகுதிகள் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தன. இவற்றுள் 62 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவருக்கும் நான்கு தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. இரட்டை உறுப்பினர் தொகுதிகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 332 ஆவது உட்பிரிவின்படி உருவாக்கப்பட்டன. உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950 இல் விவரிக்கப் பட்டிருந்தது.
மாற்றங்கள்:
1 அக்டோபர் 1953-இல் தனி ஆந்திர மாநிலம் உருவானது. 30 செப்டம்பரில் ஆந்திர அமைச்சர்கள் பதவி விலகினர். அவர்களுக்குப் பதில் பக்தவத்சலத்திடம் விவசாயம், வனங்கள், மீன்வளம், கிராம நலன் துறைகள் ஒப்படைக்கப் பட்டன. ஜோதி வெங்கடாசலம் மதுவிலக்கு மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சரானார்.
தாக்கம்:
1957-இல் நடைபெற்ற அடுத்த தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு பொறுப்பேற்று காமராஜர் மாநில காங்கிரசு குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகினார். அவருக்கு பதில் ப. சுப்பராயன் தலைவரானார். ராஜகோபாலாச்சாரி மேலவையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரமான பி. ராமமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அரசியலமைப்புச் சட்டதின் கூறியுள்ளபடி ஒருவரை மேலவைக்கு ஆளுனர் நியமிக்கும் முன் அமைச்சரவையின் பரிந்துரை வேண்டும்.
ஆனால் பிரகாசா ராஜகோபாலாச்சாரியை நியமிக்கும் போது அமைச்சரவை அமைக்கப்படவில்லை. எனவே அந்த நியமனம் செல்லாது என்பது அவரது வாதம். அவரது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பி. வி. ராஜமன்னார் மற்றும் நீதிபதி வெங்கடராம அய்யர் இத்தகைய விஷயங்களில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று தீர்ப்பளித்து தள்ளுபடி செய்தனர்.இச்செயல் பிற்காலத்தில் மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மாநில ஆளுநர்கள் செயல்பட ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்தது.
1962ம் ஆண்டு தொகுதிகள்:
1962 இல் சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழ் நாட்டில் மொத்தம் 206 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 167 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 38 தனித் தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 37 தாழ்த்தப்பட்டவருக்கும் 1 பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன.
அரசியல் நிலவரம்:
1961 இல் திமுக வின் தலைவர்களுள் ஒருவரான் ஈ. வெ. கி. சம்பத் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் தேசியக் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். அவருடன் நடிகர் சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். ஆட்சி அமைப்பு:காங்கிரசு தனிப்பெரும்பான்மை பெற்று, காமராஜர் மூன்றாம் முறை முதல்வரானார். |
|||||
by Swathi on 24 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|