பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 2 பஸ்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேரா காசி கான் மாவட்டத்தில் உள்ள முல்தான் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த 2 பஸ்கள் பேதிடீரென மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 15 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பேருந்தில் பயணித்த ஒருவர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் இறந்தனர்.
இதையடுத்து, சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்து உள்ளது. அதிவேகமாக வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் ஆண்டுதோறும் 9 ஆயிரம் சாலை விபத்துகள் நடைபெறுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த விபத்துகளில் சிக்கி 4 ஆயிரத்து 500 பேர் உயிரிழப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
|