LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

2013-ல் இந்திய சாதனைகளும், சாதித்தவர்களும் !!

ஜனவரி 22 : மும்பை மலாட் பகுதியில் வசித்து வந்த தமிழ் மாணவி பிரேமா சார்ட்டர்ட் அக்கவுண்ட்டட் (சி.ஏ) தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து தேர்ச்சி.

 

ஜனவரி 27 : வங்காள விரிகுடா கடலில் கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட கே-5 ஏவுகணை சோதனை வெற்றி.

 

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் பிபுசிதா தாஸ் முதல் பெண் கப்பல் அதிகாரி ஆனார்.

 

பிப்ரவரி 3 : சேலம் வெண்பட்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.

 

பிப்ரவரி 14 : திரிபுரா சட்ட பேரவைத் தேர்தலில் நாட்டிலேயே முதன் முறையாக 93 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை.

 

2011 ம் ஆண்டுகான இந்திரா காந்தி அமைதி விருது சமூக சேவகி இலா பட்டுக்கு வழங்கப்பட்டது.

 

பிப்ரவரி 25 : நிலம், நீர், தட்பவெப்பம், கடல் பாதுகாப்புக்காக ஏவப்பட்ட இந்தியாவின் 101 வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி சி-20 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. மேலும் ஆறு நாடுகளின் 7 செயற்கைக்கோளை 22 வது நிமிடத்தில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியது.

 

பிப்ரவரி 27 : சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 வயது குழந்தைக்கு ரத்த குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை.

 

மார்ச் 15 : கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் பிரிவின் தலைவராக இந்திய வம்சாவளி தமிழரான சுந்தர் பிச்சை தேர்வு.

 

மார்ச் 26 : இந்தியாவிலேயே உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர்க் கப்பலான ஐஎன்எஸ் கில்டன் முறைப்படி கடற்படையில் சேர்க்கப்பட்டது.

 

ஏப்ரல் 6 : வலது புறம் இருதயம் கொண்டவருக்கு ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை, நவீன முறையில் சிகிச்சை அளித்து, அதை நீக்கி மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.

 

மே 21 : இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரோந்து கப்பலான வைபவ் தூத்துக்குடி கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டது.

 

மே 22 : கோவா கடற்கரை பகுதியில் ஐஎன்எஸ் தர்காஷ் போர் கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதனை.

 

ஜூன் 28 : ராணுவத்தில் முதல் பெண் துணை கமான்டராக கனேவி லால்ஜி நியமனம்.

 

ஜூலை 26 : இந்தியாவின் வானிலை ஆய்வு செயற்கைக்கோள் இன்சாட் 3 டி, ஏரியான்-5, ராக்கெட் மூலம் பிரெஞ்சு கயானாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

 

ஜூலை 27 : அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேருக்கு கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் துறைகளில் உயரிய சிமென்ஸ் சாதனையாளர் விருது கண்ணன் சுந்தர்ராஜன், ராஜீவ் அலூர், சலீல்வதான், செந்தில் தோதாத்ரி ஆகியோருக்கு கிடைத்தது.

 

ஆகஸ்ட் 30 : கடற்படையின் பிரத்யோக உபயோகத்துக்காக ஜிசாட்-7 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள், ஏரியான்-5 ராக்கெட் மூலம் பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

 

செப்டம்பர் 5 : மத்திய தகவல் ஆணையத்தின் முதல் தலைமை ஆணையராக தீபக் சாந்து பதவியேற்பு.

 

செப்டம்பர் 27 : அமெரிக்காவின் உயர்ந்த பட்ச அதிகாரம் படைத்த கோர்ட் நீதிபதியாக இந்தியரான சீனிவாசன் பதவியேற்பு.

 

செப்டம்பர் 29 : மனிதனை போல மூளையுள்ள ரோபாட்டை இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி அமெரிக்க பல்கலைகழகத்தில் கண்டுபிடித்தார்.

 

செப்டம்பர் 7 : ஒடிசா மாநிலத்தில் சண்டிப்பூரில் உள்ள சோதனை தளத்திலிருந்து பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது.

 

நவம்பர் 5 : செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கான இந்தியா ஏவிய மங்கல்யான் விண்கலம் 43 நிமிடங்களில் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு பூமியை சுற்றத் தொடங்கியது.

 

நவம்பர் 18 : ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் அணு ஆயுத சோதனை தளத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை இந்திய இராணுவத்தால் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

 

டிசம்பர் 28 : டெல்லி மாநிலத்தின் இளம் முதவராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார்.

by Swathi   on 31 Dec 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
07-Feb-2015 22:13:49 kalaiyarasi.m said : Report Abuse
I need the essay on indraoya indiavin valarchiku kaaranam ilaignargale
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.