நல்ல தெய்வ சிந்தனையும் எடுத்த காரியங்களில் வெற்றியுடன் முடிக்கும் திறனும் உடைய உங்கள் மகர லக்னத்திற்கு 8ம் இடத்தில் ராகுவும் கேது 2ம் இடத்திலும் சஞ்சாரம் செய்வது ஓரளவு சுமாரான பலன் ஆகும். கேது 2ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது பெயர் புகழ் அந்தஸ்த்து கூடும். பணப்புழக்கம் எதிர்பாராமல் வந்து சேரும். முன்னோர்களுடைய சொத்து அல்லது கணவன் மனைவி மூலம் பொருள் வரவு தனவரவு அல்லது எதிர்பாராத தனவரவு வந்து சேரும். அதே சமயம் பேச்சில் அதிகக் கவனம் தேவை. தேவையில்லாமல் யாருடனும் அதிகமாகப் பேசுதல் கூடாது. உடன்பிறந்த சகோதர சகோதரிகளால் எதிர்பாராத லாபமும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற மனவருத்தங்களும் வந்து சேரும்.
நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். அடிக்கடி பயணம் செய்ய வேண்டியது வரும். அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. புதிய முயற்சிகளில் இறங்கும் பொழுது கவனமுடன் செயல்படுதல் வேண்டும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமுடனும் விளங்கினாலும் போக்குவரத்து வண்டி வாகனங்களில் பயணத்தில் அதிகக் கவனம் தேவை. சொத்துக்கள் ஏதேனும் விற்பதாக இருந்தால் சற்று சுமாரான விலைக்கே போகும். முதலில் சொத்துக்களை விற்றுவிட்டு அதன்பின் சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் வந்து சேரும்.
தாயாரின் உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் கல்ந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு காதல் கனிந்த திருமணத்தில் முடிய சந்தர்ப்பங்கள் அமையும். பிரச்சனைகள் இருந்து கொண்டேயிருந்தாலும் அதைப்பற்றி கவலைபடாமல் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஒரு பக்கம் இருந்து கொண்டேயிருக்கும்.
கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடனை வாங்க வேண்டியது வரும். இருக்கும் பொருட்கள் கையைவிட்டுப் போகும். அதே சமயத்தில் புதிதாக வண்டி வாகனங்கள், வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்புகளும் சூழ்நிலையும் வந்து சேரும். வழக்குகள் கவலயளிப்பவையாக இருக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். எப்பொழுதும் சுதந்திரமாக இருக்க மனம் விரும்பும். குழந்தைகளால் மனமகிழ்ச்சியும் சந்தோஷமும் பெருகும். தந்தைவழி உறவால் நன்மைகளும் அதே சமயம் தந்தயின் உடல்நலத்தில் கவனம் தேவை. தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். அலைச்சல்களால் நன்மை ஏற்படும். அடிக்கடி ஆலய தரிசனம் தெய்வ தரிசனம் கிட்டும். வெளிநாடு செல்வதில் சிறிது தடையேற்பட்டு வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும். பாஸ்போர்ட், விசா உடனடியாக வந்து சேரும். நண்பர்களால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். மற்றவர்களுக்காக உழைக்க வேண்டியது வரும். எனவே எதிலும் சற்று கவனம் தேவை.
உத்யோகம், வேலை (JOB)
அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்ப்பவர்களை இங்கு உத்யோகம் பார்ப்பவர்கள் என்ற பொருளில் இங்கு குறிக்கப்படுகிறது. இதுவரை வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டவர்களுக்கு உடனடியாக நல்ல வேலை கிடைக்க வாய்ப்புகள் அமையும். கிடைத்த வேலையில் அமர்ந்து பணி மேற்கொள்ளல் வேண்டும். வேலையில் முன்னேற்றமும் பெயர் புகழும் ஏவற்படும். உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் அமையும். பென்சன், பி.எப், கிராடிவிட்டி வராதவர்களுக்கு இனி உடனடியாக வந்து சேரும். ஒரு சிலருக்கு “ஆன்சைட்” கிடைத்து வெளிநாடு செல்ல வாய்ப்பும் அதனால் எதிர்பார்த்த நற்பலன்களும் அமையும். விருப்ப ஓய்வு பெறுபவர்கள் வேலயை விட உகந்த காலமாகும். அடிக்கடி வேலையில் லீவு போட வேண்டியது வருமாகையால் வேலையில் அதிகக் கவனம் தேவை.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
சிறுதொழில் சுயதொழில் புரிபவர்களுக்கு ஆரம்ப காலங்களில் சற்று லாபம் குறைவாக இருந்தாலும். அதன்பின் வரும் காலங்களில் எதிர்பார்த்த லாபங்கள் வந்து சேரும். சுயதொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர். பார்ட்னர்ஷிப்போடு சேர்ந்து தொழில் செய்பவர்கள் தொழிலில் கவனம் தேவை. தேவையற்ற மனவருத்தங்கள் பார்ட்னர்களால் வந்து சேர வாய்ப்பும் அதனால் மனக்கஷ்டங்களும் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி சற்று சுமாராக இருந்து வரும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும்.. பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வாய்ப்புகள் அமையும். இரும்பு எஃகு சிமெண்ட் கப்பல் மீன்பிடித் தொழில், பால், உணவு, ஓட்டல், பழங்கள், காய்கறிகள் துறைகள் சிறந்து விளங்கும். மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல், கனிம வளங்கள் துறைகள் ஏற்றம் பெற்று காணப்படும். நிதி, நீதி, வங்கித்துறை, இன்சூரன்ஸ் துறைகள் சற்று சுமாராக இருக்கும். செய்தி, போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஐ.டி. துறைகள் ஏற்றம் பெற்று காணப்படும். காகிதம், பிளாஸ்டிக், அழகுசாதனத் துறைகள் லாபகரமாகவும் தெருவோர வியாபாரங்கள் நல்ல லாபகரமாகவும் இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகள் நல்ல ஆதாயத்துடன் விளங்கும். ரியல் எஸ்டேட், கமிஷன், ஏஜென்சி, புரோக்கர், கன்சல்டன்சி, துறைகள் சற்று சுமாராகவே இருந்து வரும்.
விவசாயம்
விவசாயத்தில் எதிர்பார்த்த லாபங்கள் வந்து சேரும். விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்கும். விவசாய விளை நிலங்களை விற்க வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. பணப்புழக்கம் சற்று சுமாராக இருந்து வரும்.
அரசியல்
அரசியல் வாழ்வு ஏற்ற இறக்கங்களூடன் இருந்து வரும். அரசாங்கத்தால் தேவையில்லாத பிரச்சனைகள் இருந்து கொண்டேயிருக்கும். சமூகத்தில் பெயர் புகழ் ஏற்பட்டாலும் அதை முழுவதுமாக அனுபவிக்க வாய்ப்புகள் குறைந்து காணப்படும். தேர்தலில் நிற்பதாக இருந்தால் யோசித்து தேர்தலில் நிற்பதே உகந்ததாகும். தொண்டர்களின் உண்மையான அன்பும் ஆதரவும் இருந்தாலும் எதிர்களின் தொல்லைகள் சதா இருந்து கொண்டேயிருக்கும்.
கலைஞர்கள்
கலைத்துறை ஏற்றம் மிகுந்து காணப்படும் புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டு அதனால் பெயரும் புகழும் அதிகரிக்கும். அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்புகள் அமையும். சினிமா, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், ஜோதிடம், சின்னத்திரை ஏற்றமுடன் அமையும். பணப்புழக்கம் சரளமாக இருந்து வரும், பட்டங்கள், விருதுகள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அமையும்.
மாணவர்கள்
புதிய முயற்சிகளில் இறங்கும்பொழுது அதிகக் கவனம் தேவை. எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம்கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும். வீட்டைவிட்டு வெளியூர், வெளிநாடு, சென்று படிக்க ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. வங்கிக்கடன் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டு கடன் கிடைக்கும்.
பெண்கள்
அடிக்கடி தெய்வ தரிசனம் செய்ய வாய்ப்பு அமையும். அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற மனக்குழப்பங்களும் வேதனைகளும் வந்து போகும். உடலில் அடிக்கடி அசதியும் சோர்வும் ஏற்பட்டு விலகும். இதுவரை நடக்காமல் தள்ளிப்போன திருமணம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் இருக்கும். வீண் விஷயங்களில் தலையிடாமல் பேச்சைக் குறைத்தல் நலம். வேலையாட்களால் மனவேதனைகளும் பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு ஊதிய உயர்வும் கிட்டும். “ஆன்சைட்” செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பும் வெளிநாடு செல்ல வாய்ப்பும் அமையும். உயரதிகாரிகளால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளு,ம் வந்து சேரும். சக ஊழியர்களின் நட்பும் அன்பும் கிடைத்துக் கொண்டிருக்கும். நெருங்கிய நண்பர்களை விட்டுப் பிரிய நேரிடும்.
உடல் ஆரோக்யம்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். சர்க்கரை உப்புச்சத்து நோய் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பது நலம். கை, கால், முதுகு, அடிவயிற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். உடலில் சளித்தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் நலம்.
அதிர்ஷ்ட எண் : 5, 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை, வெண்மை அதிர்ஷ்ட நாள் : புதன், வெள்ளி அதிர்ஷ்ட ரத்தினம் : மரகதப்பச்சை, வைரம்
பரிகாரம்
வெள்ளிக்கிழமை “ஸ்ரீ மகாலஷ்மியை” வணங்கிவருதல் வேண்டும். புதன்கிழமை “சிவனை” வழிபட நற்பலன்கள் ஏற்படும். வேளாங்கண்ணி சென்று “மாதாவை” வணங்கி வர நற்பலன்கள் ஏற்படும்.
- ஜோதிட இமயம் அபிராமி சேகர்
maduraiabiramisekar@gmail.com
9994811158
|