LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் வளர்ச்சிக் கோரிக்கைகள் Print Friendly and PDF

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருக்கு மே 2024 ல் வழங்கப்பட்ட கோரிக்கை மனு

பெறுநர்

மாண்புமிகு அமைச்சர்,
தமிழ் வளர்ச்சித்துறை.

ஐயா,

     தமிழ் வளர்ச்சி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளைத் தன்னார்வத்தின் அடிப்படையிலும் தமிழின்மேல் உள்ள பற்றின் அடிப்படையிலும் செய்து வருகிறோம். இதில் கிடைத்த களப்பணி அனுபவத்தில் எங்களைக் கீழ்க்கண்ட வகையில் தமிழ் வளர்ச்சித்துறை உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள  பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

1)   நூற்றாண்டுக் காலத் திருக்குறள் பரவலாக்கல், மொழிபெயர்ப்பு வரலாற்றை ஆராய்ந்து ஆறு ஆண்டுகள் ஆய்வின் அடிப்படையில் அமெரிக்கத் வாழ் தமிழர்கள் முன்னெடுப்பில்  “Thirukkural Translation In World Languages” , English, Colour 212 பக்கம் நூலைத் தமிழ்நாடு நூலகங்கள், தமிழ்வளர்ச்சித்துறை சார்ந்த நூலகத் தொகுப்புகளில், அலுவலகங்களில் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்.

2) உலகத் தமிழர்கள், ஊடகங்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்களால் பயன்படுத்தப்படும் முதன்மையான "வாணி" (www.vaanieditor.com)   மென்பொருளை அரசுத்துறைகளில் பயன்படுத்த ஆவன செய்தல். இது ஏற்கனவே தமிழ்நாடு அரசு  கணித்தமிழ் விருது, கனடாவின் இலக்கியத் தோட்ட விருது பெற்றது.

3)   மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொறுப்பேற்று மாவட்டத்திற்கு இருவருக்கு மட்டுமே பரிசு என்று இருந்த திருக்குறள் முற்றோதல் விருதின் எண்ணிக்கையின் கட்டுப்பாட்டை நீக்கி 1330 திருக்குறளை முற்றோதல் செய்பவருக்கு ரூபாய் 15000 என்று அறிவித்துள்ள நிலையில் இத்திட்டத்தைச் சரியாக மக்களிடம் கொண்டு செல்ல ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு முற்றோதல் பயிற்சியாளரை நியமித்து அவர்களுக்கு அந்த மாவட்ட புரவலர் ஒருவர் உதவியுடன் தமிழ் படித்தவருக்குத் திருக்குறளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறோம். இதனை மேலும் வலுப்படுத்தத் தமிழ்வளர்ச்சித்துறையுடன் இணைந்து மாவட்டத்திற்கு ஒரு பயிற்சியாளருக்கு ரூபாய் 5000 வழங்கி மாவட்டத்திற்கு 50  மாணவர்களைத் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளராக உருவாக்க முடியும் என்று கோருகிறோம்.

4) திருக்குறளை முழுமையாகப் பல ஆண்டுகள் தன்னலமில்லா அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கும் உலகத் திருக்குறள்  முற்றோதல் இயக்கத்தின் திருக்குறள் சார்ந்த அகவை முதிர்ந்த திருக்குறள் பயிற்றுநர்களுக்கு, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும்   . தகுதியானவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்குவதற்குப் பொருத்தமான களப்பணியாளர்கள் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.

5) உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஒருங்கிணைப்பில் தமிழ் வளர்ச்சி மன்றம் வழங்கும் 40000 திருக்குறள் நூல்களைத் தமிழ்நாட்டில் அணைத்து மாவட்டத்திலும் அடுத்து 9 ஆண்டுகளுடன் (4லட்சம்) மாணவர்களுக்கு இலவசமாக வழங்கத் தமிழ்வளர்ச்சித்துறையின் ஒத்துழைப்பைக் கோருகிறோம்.

6) தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிப்பட்டறையை உலகத்தமிழ் அறிஞர்களை அழைத்து வழங்க எங்களைப் பயன்படுத்துமாறு கோருகிறோம்.

7) ஆண்டுக்கு ஒருமுறை தமிழ் ஆசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்களுக்கு அவர்கள் பிற பாடங்களைப் போல் அல்லாது சமூகத்தைச் செதுக்கிடும் சிற்பிகள் என்பதை வலியுறுத்த, உணர்த்தத் தமிழ்நாடு மட்டுமல்ல பலநாட்டு அறிஞர்களைக்கொண்டு பயிலரங்கம் நடத்துவது.

8) வணிகத் தமிழ்ப்பெயர்களை முழுமையாக நடைமுறைப் படுத்த ஒரு மென்பொருளை வடிவமைத்து தமிழ்ப் பெயர் வைக்காத / உரிய அளவில் சட்டப்படி இல்லாத பெயர்ப்பலகைகளைக் கொண்ட நிறுவனங்களுக்குத் தமிழ்வளர்ச்சித்துறையுடன் இணைந்து "இனிப்பகம்" "அடுக்ககம்" உள்ளிட்ட பெயர்களைப் பரிந்துரைத்து கடிதம் எழுதி பெயர்ப்பலகைகளை மாற்ற வலியுறுத்தல்.

9) திருக்குறள் முற்றோதல் முடித்த மாணவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்குதல்.

10) திருக்குறளைத் தேசிய நூலக அறிவிக்கவும், திருக்குறளை யுனெஸ்கோவில் கொண்டு செல்லவும் குழு அமைத்து எங்களையும் அதில் உறுப்பினராக இணைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

 

தங்கள் உண்மையுள்ள,

 

by Swathi   on 03 Nov 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு ஆட்சித்தமிழை நிலைநிறுத்துவோம்! தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு ஆட்சித்தமிழை நிலைநிறுத்துவோம்!
செந்தமிழ்த் திருத்தேர் தூயதமிழ் மாணவர் இயக்கம் பன்னாட்டுத் தூயதமிழ் மாணவர் மாநாடு - 2025 -மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செந்தமிழ்த் திருத்தேர் தூயதமிழ் மாணவர் இயக்கம் பன்னாட்டுத் தூயதமிழ் மாணவர் மாநாடு - 2025 -மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் நடத்தும் மாணவர் எழுச்சித்தமிழ் மாநாட்டுத் தீர்மானங்கள் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் நடத்தும் மாணவர் எழுச்சித்தமிழ் மாநாட்டுத் தீர்மானங்கள்
முதலாவது உலகத் தமிழிசை மாநாடு -2019 தீர்மானங்கள் முதலாவது உலகத் தமிழிசை மாநாடு -2019 தீர்மானங்கள்
அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை- தமிழ்ப் பல்கலைக் கழகம் நடத்திய 'தமிழ்க் கூடல்-2024' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்  அமைச்சரிடம் ஒப்படைப்பு அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை- தமிழ்ப் பல்கலைக் கழகம் நடத்திய 'தமிழ்க் கூடல்-2024' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமைச்சரிடம் ஒப்படைப்பு
தமிழர்கள் தமிழ்ச் சங்கத்தினர் ஆற்ற வேண்டிய சில  குறள் சார்ந்த பணிகள்.... தமிழர்கள் தமிழ்ச் சங்கத்தினர் ஆற்ற வேண்டிய சில குறள் சார்ந்த பணிகள்....
இளையராசாவிடம்  எனக்குள்ள கிடுக்கங்களும் வேண்டுகோள்களும்-நாக.இளங்கோவன் இளையராசாவிடம் எனக்குள்ள கிடுக்கங்களும் வேண்டுகோள்களும்-நாக.இளங்கோவன்
பெயர் பலகைகள் அன்னை தமிழ் மொழியில் பெயர் பலகைகள் அன்னை தமிழ் மொழியில்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.