LOGO
  முதல் பக்கம்    செய்திகள்     Print Friendly and PDF

கனடா மெக்சிகோ மீதான 25% இறக்குமதி வரி அமலுக்கு வந்தது- பதிலடி தருவோம் என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை!

கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் மீதான 25 சதவீத இறக்குமதி வரி செவ்வாய்க்கிழமை  முதல் நடைமுறைக்கு வருவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்கா மீது அதிக வரியை விதிப்பதாகவும், அதற்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையைக் கொண்டு வர இருப்பதாகவும் கூறியிருந்தார். அந்த வகையில், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.


இதைத் தொடர்ந்து, இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது செய்தியாளர்கள் முன் பேசிய டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோவுக்குப் புதிய வரியைத் தவிர்ப்பதற்கு எவ்விதக் காரணமும் இல்லையெனக் கூறி, செவ்வாய்க்கிழமை முதல் புதிய வரி அமலுக்கு வருவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


சீனா, கனடா, மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான கூடுதல் வரிவிதிப்பு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என்று ட்ரம்ப் நிர்வாகம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நாடுகள் பதிலடி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளன. இது வட அமெரிக்கா முழுவதும் கடுமையான வர்த்தகப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்க அதிபரின் இந்த முடிவினைக் கண்டித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இது அநீதியானது என்று தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் இந்த வரித் திட்டத்தை அறிவித்தபோது அதற்கு எதிராக ட்ரூடோ தெரிவித்திருந்த அமெரிக்கப் பொருட்களுக்கான எதிர் வரி அறிவிப்பைத் திங்கள்கிழமை அவர் வெளியிட்டார்.

அதுகுறித்து ட்ரூடோ, “முதல் கட்டமாக, கனடாவுக்குள் இறக்குமதியாகும் சுமார் 30 பில்லியன் (20.6 பில்லியன் அமெரிக்க டாலர்) கனேடியே டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருள்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். அமெரிக்கா தனது முடிவினைத் திருப்பப் பெறாதபட்சத்தில் இந்த உத்தரவு நியூயார்க் நேரப்படி நள்ளிரவு 12.01 முதல் அமலுக்கு வரும்.


இரண்டாவது கட்டமாக, அடுத்த மூன்று வாரங்களில் சுமார் 125 கனேடிய டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருள்களுக்கு 25 சதவீதம் வரிகள் விதிக்கப்படும். அதற்கு அடுத்தபடியாக, முக்கிய துறைகளான, வானங்கள், எஃகு, அலுமினியம் போன்றவற்றுக்கு வரி விதிக்கப்படும். அமெரிக்கா கூடுதல் வரி தொடர்பான தனது முடிவினைத் திரும்பப் பெறும் வரையில் எங்களுடைய வரிகளும் தொடரும்" என்று தெரிவித்தார்.


இதனிடையே மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாற்றுத்திட்டங்கள் தயாராக உள்ளன. எங்களிடம் பிளான் பி, சி, டி கைவசம் உள்ளன. அமெரிக்காவின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்க மெக்சிகோ தயாராக உள்ளது.” என்றார்.


இந்தநிலையில், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் குறித்தும், வரிவிதிப்பை நிறுத்துவது குறித்தும் மெக்சிகோ மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் இணக்கமானதாக இருந்தது என்றும், இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு நன்றாகவே உள்ளது என்று மெக்சிகோ அதிபர் தெரிவித்திருந்தார்.


இதனிடையே, திட்டமிட்டபடி, 25 சதவீதம் வரி விதிப்புகள் தொடங்கும்" என்று திங்கள் கிழமை அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தார். எல்லைப்பாதுகாப்பு, போதைப் பொருட்கள் நடமாட்டத்தைத் தடுப்பது, சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காகவே இந்த வரி விதிப்புகள் என்று தனது செயலை நியாயப்படுத்தியிருந்த அதிபர் ட்ரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ உடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைச் சரி செய்யவும், அமெரிக்காவுக்கு மீண்டும் உற்பத்தி சார்ந்த வேலை வாய்ப்புகளை மீண்டும் கொண்டு வரவும் இந்த வரி விதிப்பு என்று தெரிவித்திருந்தார்.


ட்ரம்ப்பின் இந்த வரி அறிவிப்பு பங்குச்சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை வர்த்தகத்தின் போது, எஸ் அண்டி பி 500 குறியீடு 2 சதவீதம் குறைந்தது. ட்ரம்ப்பின் இந்த முடிவு பணவீக்கத்தை அதிகப்படுத்தும், விநியோகச் சங்கிலியைப் பாதிக்கும், வட அமெரிக்காவில் வர்த்தகப் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

 

by hemavathi   on 04 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பள்ளிப் பாடத்திட்டத்தில் 'வாழ்வியல் தமிழ்' பாடம் தேவை! - அரசு பரிசீலிக்க வேண்டும் பள்ளிப் பாடத்திட்டத்தில் 'வாழ்வியல் தமிழ்' பாடம் தேவை! - அரசு பரிசீலிக்க வேண்டும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.