சவுதி அரேபிய அரசின் புதிய தொழிலாளர் சட்டம் காரணமாக அங்கு வேலையிழந்த சுமார் 75 ஆயிரம் இந்தியர்களை தாயகத்திற்கு கொண்டுவர இந்திய அரசு அவசரகால நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளது. சவூதி அரசு தங்கள் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மையை தீர்க்கும் பொருட்டு, நிதாகத் என்ற புதிய சட்டத்தை கொண்டுவந்தது. இதன்படி சவுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனங்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தியிருந்தால் அங்கு கண்டிப்பாக உள்நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் வேலையில் சேர்க்க வேண்டும். இந்த சட்டம் அமல் ஆனதை அடுத்து பல்வேறு வெளிநாட்டினர் வேலையிழந்தனர். மேலும் ஒர்க் பெர்மிட் விசா இல்லாதவர்களும் வெளியேற்ற மூன்று மாத காலக்கெடுவை அந்நாட்டு அரசு விதித்திருந்தது. காலக்கெடு நாளை மறுநாளுடம் முடிவடைவதை அடுத்து உரிய ஆவணங்கள் இல்லாமல் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப விசா வழங்கும் ஏற்பாடுகளை இந்திய தூதரகம் மேற்க்கொண்டுள்ளது.
|