LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

இரண்டாவது ஆண்டாக 40000 திருக்குறள் நூல்கள் நூல்களை மாவட்டத்திற்கு 1000 என வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் , உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ( www.kuralworld.org ) வழியாக வழங்கும் திருக்குறள் முனுசாமியார் உரையுடன் கூடிய 40000 திருக்குறள் நூல்களை ஒரு மாவட்டத்திற்கு 1000 நூல்கள் வீதம் தமிழ்நாடு , புதுச்சேரி மாநிலங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளித் தலைமையாசிரியர்களின் மூலம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வழங்கிவருகிறோம்.
 
ஆண்டுக்கு 40000 ஆயிரம் நூல்கள் வீதம் கடந்த ஆண்டு தொடங்கி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு என சுமார் 4 இலட்சம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல் இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நூல்களை நமக்கு பொறுப்பேற்று வழங்குபவர் ஹார்வார்டு தமிழிருக்கையை உருவாக்கிய குழுவின் மருத்துவர் விஜய் ஜானகிராமன் அவர்களும், அவ்ரது தலைமையில் இயங்கும் உலகத் தமிழ் வளர்ச்சி மன்றமுமாகும். வானதி பதிப்பகம் அச்சிட்டு வழங்குகிறது.
இவ்வாண்டுக்கான நூல்களை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
 
மாண்புமிகு கல்வியமைச்சர் அவர்களைக்கொண்டு இரு ஆண்டுகளுக்கு முன் தொடங்கிவைக்கப்பட்ட இத்திட்டம் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை வழங்கும் திருக்குறள் முற்றோதல் (1330 திருக்குறள் ஒப்பிக்க) போட்டியும், அதில் வெற்றிபெறும் மாணாக்கர்கள் ரூபாய் 15000 த்துடன் சான்றிதழும் பெரும் வகையில் விருதும் பெரும் திட்டத்திற்கு இலவசத் திருக்குறள் பயிற்சி வழங்கவும் ஒருங்கிணைந்து நடந்துவருகிறது.
 
ஆர்வமுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தை kural.mutrothal@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
 
ஏற்கனவே முற்றோதல் முடித்து பரிசு பெற்றவர்கள், அடுத்தக்கட்ட வளர்ச்சியைப் பெற இங்கு https://www.valaitamil.com/mutrothal-students-register... உங்கள் விவரங்களை பதிவுசெய்யலாம்.
 
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி,
by Swathi   on 16 Nov 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாநில அளவிலான திருக்குறள் போட்டிகள்... : லட்சங்களில் பரிசை அள்ளிய ஆசிரியர்கள் மாநில அளவிலான திருக்குறள் போட்டிகள்... : லட்சங்களில் பரிசை அள்ளிய ஆசிரியர்கள்
தமிழக முதல்வர் வெளியிட்ட குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகள்! தமிழக முதல்வர் வெளியிட்ட குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகள்!
வலைத்தமிழ் பதிப்பகத்தின் இரண்டாவது திருக்குறள் நூல் -கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார் வலைத்தமிழ் பதிப்பகத்தின் இரண்டாவது திருக்குறள் நூல் -கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்
திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை
மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு, மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு,
பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்  நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது. பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார் பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார்
நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்.. நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.