சிந்தனையாளர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி நம்பு தம்பி! நம்மால் முடியும் என்று தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான இளைய தலைமுறையிடம் தனது நல்ல எண்ணங்களை விதைத்தார். "சுய வளர்ச்சி-சுய பொருளாதார மேம்பாடு-சமூக ஈடுபாடு என்ற மூன்று முக்கிய வாழ்வியல் கருத்துக்களை "மக்கள் சக்தி இயக்கத்தின்" மூலம் தமிழ்நாடு முழுதும் பரப்பினார். அந்த மா மனிதரிடமிருந்து நாம் எடுத்துக் கொள்ளவேண்டிய மூன்று முக்கிய கருத்துக்கள் இதோ:
1.நாம் இந்த மண்ணிலே பிறந்ததிற்கு இந்த மண்ணிற்கு ஏதாவது நல்லது செய்தாக வேண்டும். 2.நாம் இந்த மண்ணை விட்டு செல்லும்போது சில நல்ல அடையாளங்களை இந்த மண்ணில் விட்டு விட்டு , செல்ல வேண்டும். 3.நமக்கும்,பிறருக்கும்,இந்த சமுதாயத்திற்க்கும் ஆன வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை.உனக்காக மட்டும் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
|