LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

எவரெஸ்ட் சிகரம் மீது ஏறுவதற்கான கட்டணம் 36% உயர்வு

எவரெஸ்ட் சிகரம் மீது ஏறுவதற்கான கட்டணத்தை நேபாள அரசு 36 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.

நேபாளத்தின் இமய மலைப்பகுதியில் சாகர் மாதா தேசியப் பூங்காவில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உலகம் முழுவதும் ஏராளமான மலையேற்ற வீரர்கள் நேபாளம் வழியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகின்றனர். இந்த சீசனில் ஒரு நபருக்கு ரூ.9.51 லட்சம் கட்டணம் விதிக்கப்பட்டது. தற்போது ஒரு நபருக்கு ரூ.12.96 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது 36 சதவீதக் கட்டண உயர்வு ஆகும். 

செப்டம்பர் முதல் நவம்பர் வரை எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற ரூ.6.48 லட்சமும், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை சிகரத்தில் ஏற ரூ.3.02 லட்சமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து நேபாள அரசு வட்டாரங்கள் கூறும்போது, “நேபாள அரசின் ஒட்டுமொத்த வருவாயில் 4 சதவீதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு விதிக்கப்படும் கட்டணம் மூலம் கிடைக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம். இதனால் மலையேற்ற வீரர்களின் எண்ணிக்கை குறையாது. புதிய கட்டண உயர்வு ஜனவரி முதல் அமலுக்கு வந்துள்ளது" என்று தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் எவரெஸ்ட் சிகர மலைப்பகுதிகளிலிருந்து 119 டன் குப்பைகளை நேபாள அரசு அகற்றி உள்ளது. மேலும் மலையேறியபோது உயிரிழந்த 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற பணிகளுக்கு நேபாள அரசு அதிகத் தொகையைச் செலவிட நேரிடுகிறது. எனவே கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

by hemavathi   on 24 Jan 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்கக் கச்சா எண்ணெய்க்கு 10% , நிலக்கரிக்கு 15%  வரி -  சீனா  பதிலடி அமெரிக்கக் கச்சா எண்ணெய்க்கு 10% , நிலக்கரிக்கு 15% வரி - சீனா பதிலடி
வரும் 13-ம் தேதி அமெரிக்க அதிபர்  ட்ரம்ப்பை- இந்திய பிரதமர் மோடி சந்திப்பு வரும் 13-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை- இந்திய பிரதமர் மோடி சந்திப்பு
சவுதி அரேபியாவில் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வு சவுதி அரேபியாவில் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வு
கூடுதல் வரி விதிப்பு, கிரீண்ட்லேண்-பனாமா விவகாரம் - ட்ரம்ப் அறிவிப்பால் பதற்றமாகும் நாடுகள்! கூடுதல் வரி விதிப்பு, கிரீண்ட்லேண்-பனாமா விவகாரம் - ட்ரம்ப் அறிவிப்பால் பதற்றமாகும் நாடுகள்!
ஊழியர்களுக்கு 70 கோடி ஊக்கத்தொகை வழங்கிய சீன நிறுவனம் ஊழியர்களுக்கு 70 கோடி ஊக்கத்தொகை வழங்கிய சீன நிறுவனம்
அமெரிக்காவில் விசா காலம் முடிந்தபிறகும் தங்கியிருக்கும் 7000 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் விசா காலம் முடிந்தபிறகும் தங்கியிருக்கும் 7000 இந்திய மாணவர்கள்
அமெரிக்க முன்னணி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியப் பெண் அமெரிக்க முன்னணி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியப் பெண்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் 'தமிழ் அறிவு வளாக'த்துக்கு சாஸ்தா தமிழ்ச்சங்க இயக்குநர் ராமன் வேலு பங்களிப்பு! ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் 'தமிழ் அறிவு வளாக'த்துக்கு சாஸ்தா தமிழ்ச்சங்க இயக்குநர் ராமன் வேலு பங்களிப்பு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.