LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

எலக்ட்ரானிக்கழிவுகளை அகற்றும் பணியில் 4.5 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் !!

இந்தியா முழுவதும் எலக்ட்ரானிக்கழிவுகளை அகற்றும் பணியில் சுமார் 4.5 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. 


இது குறித்து அந்த அமைப்பின் செயலாளர் டி.எஸ் ராவத் கூறியதாவது,


இந்தியா முழுவதும் இ-கழிவு எனப்படும் எலக்ட்ரானிக்கழிவு பொருட்களை அழிக்கும் பணியில் சுமார் 4.5லட்சம் இந்திய குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் 10 முதல் 14 வயதுடையவராக இருக்கின்றனர். 


சராசரியாக ஆண்டு ஒன்றிற்கு சுமார் 15 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு இ-கழிவுகள் இந்தியாவில் உருவாக்கப்படுகின்றன. நாட்டிலேயே மிக அதிகமாக மும்பையில் 96 ஆயிரம் மெட்ரிக்டன் அளவிற்கு இ-கழிவுகள் உருவாக்கப்படுகின்றன. 


இந்த எலக்ட்ரானிக்கழிவுகளில், கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட பொருட்கள் 68 சதவீதத்தையும், தொலை தொடர்பு துறை சம்பந்தப்பட்ட பொருட்கள் 12 சதவீதத்தையும், எலக்ட்ரி்கல்துறை 8 சதவீதத்தையும், மருத்துவத்துறை 7 சதவீதத்தையும், வீட்டு உபயோகப்பொருட்கள் 5 சதவீதத்தையும் பிடித்துள்ளன. 

by Swathi   on 22 Apr 2014  0 Comments
Tags: Child Labour   E-Waste Industry   E-Waste   எலக்ட்ரானிக்கழிவு   குழந்தை தொழிலாளர்        
 தொடர்புடையவை-Related Articles
தெய்வங்களின் கைகளில்   - சேயோன் யாழ்வேந்தன் தெய்வங்களின் கைகளில் - சேயோன் யாழ்வேந்தன்
எலக்ட்ரானிக்கழிவுகளை அகற்றும் பணியில் 4.5 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் !! எலக்ட்ரானிக்கழிவுகளை அகற்றும் பணியில் 4.5 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் !!
பிச்சை எடுக்கும் சிறுவர்களையோ அல்லது வேலை பார்க்கும் குழந்தைகளையோ கண்டால் எப்படி உதவுவது? பிச்சை எடுக்கும் சிறுவர்களையோ அல்லது வேலை பார்க்கும் குழந்தைகளையோ கண்டால் எப்படி உதவுவது?
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் புதிய முயற்சி !! குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் புதிய முயற்சி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.