இந்தியா முழுவதும் எலக்ட்ரானிக்கழிவுகளை அகற்றும் பணியில் சுமார் 4.5 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் செயலாளர் டி.எஸ் ராவத் கூறியதாவது,
இந்தியா முழுவதும் இ-கழிவு எனப்படும் எலக்ட்ரானிக்கழிவு பொருட்களை அழிக்கும் பணியில் சுமார் 4.5லட்சம் இந்திய குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் 10 முதல் 14 வயதுடையவராக இருக்கின்றனர்.
சராசரியாக ஆண்டு ஒன்றிற்கு சுமார் 15 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு இ-கழிவுகள் இந்தியாவில் உருவாக்கப்படுகின்றன. நாட்டிலேயே மிக அதிகமாக மும்பையில் 96 ஆயிரம் மெட்ரிக்டன் அளவிற்கு இ-கழிவுகள் உருவாக்கப்படுகின்றன.
இந்த எலக்ட்ரானிக்கழிவுகளில், கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட பொருட்கள் 68 சதவீதத்தையும், தொலை தொடர்பு துறை சம்பந்தப்பட்ட பொருட்கள் 12 சதவீதத்தையும், எலக்ட்ரி்கல்துறை 8 சதவீதத்தையும், மருத்துவத்துறை 7 சதவீதத்தையும், வீட்டு உபயோகப்பொருட்கள் 5 சதவீதத்தையும் பிடித்துள்ளன.
|