|
|||||
471 புதிய பேருந்துகளின் சேவை சென்னையில் இருந்து முதல்வர் தொடங்கி வைத்தார். |
|||||
சென்னையில் 471 புதிய பேருந்துகளின் சேவையை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போக்குவரத்துத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ரூ.127 கோடி மதிப்பில் 471 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. அதில் 60 பேருந்துகள் ஏசி வசதி மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் ஆகும். விழுப்புரம் கோட்டத்திற்கு 103 பேருந்துகளும் சேலம் கோட்டத்திற்கு 77 பேருந்துகளும் கோயம்புத்தூர் கோட்டத்திற்கு 40 பேருந்துகளும் கும்பகோணம் கோட்டத்திற்கு 111 பேருந்துகளும் மதுரை கோட்டத்திற்கு 30 பஸ்கள் புதிதாக வாங்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்து சேவை உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில் ரூ.95 கோடி செலவில் அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். சென்னையில் இருந்து ஆந்திரா, தெலுங்கானாவுக்குச் செல் லும் புறநகர் பேருந்துகளுக்கு என தனியாக ஒரு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. இதன்படி, சென்னையை ஒட்டியுள்ள மாதவரத்தில் ரூ.95 கோடி செலவில் அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இதனால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசல் வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
|||||
by Mani Bharathi on 10 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|