எத்தனையோ காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு படையெடுத்தாலும் இன்று வரை கவுண்டமணிக்கு இருக்கும் மவுசு குறையவே இல்லை. கவுண்டமணியின் வசனங்கள், காமெடி இசைகள் கூட இப்போதுப் இருக்கும் இளைஞர்களின் மொபைல் ரிங் டோன்களாக உள்ளன. இந்நிலையில் கவுண்டமணி நடிப்பில் 49 -ஓ படம் முடிந்து ரிலீஸ் தேதியை எதிர்ப்நோக்கி காத்திருக்கிறது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக வெளியாக இருந்த விஜய்யின் புலி தள்ளிப்போனதால் கவுண்டமணியின் 49ஓ படம் இந்த தேதியில் வெளியாக இருக்கிறது. மேலும் இதே நாளில் ரஜினி முருகன் படமும் வெளியாவதும் குறிப்பிடத்தக்கது. இது தவிர்த்து ‘எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது என்ற படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள வாய்மை படத்திலும் கவுண்டமணி நடித்துள்ளார். இந்நிலையில் இரண்டு புதிய படத்தில் கவுண்டமணி ஒப்பந்தமாக உள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
|