LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு!

கீழடியில் நடந்த 4-ம்  கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்றது.

சிவகங்கை மாவட்டம், கீழடி பள்ளிச் சந்தை புதூரில் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய தொல் பொருள் அகழ்வாராய்ச்சி துறையினரால் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன.

2014 முதல் 2017 வரை நடைபெற்ற மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளில் தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டிடங்கள், பல்வேறு வகையான மணிகள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், இரும்பால் செய்யப்பட்ட  போர்க் கருவிகள், உறை கிணறுகள், வெளிநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளிட்ட ஏராளமான தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

இதையடுத்து, தொல்லியல் துறையின் துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி பூமி பூஜையுடன் தொடங்கிய 4-ம் கட்ட அகழாய்வு பணியில் 2 தொல்லியலாளர்கள், 4 அகழ்வாய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமான களப் பணியாளர்கள் ஈடுபட்டனர். 

சுமார் 6 மாதங்கள் நடைபெற்ற இந்தப்  பணி கடந்த செப்.30 ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், 34 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில் 5,820 தொல் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன.

இதனையடுத்து, கடந்த 13 ஆம் தேதி, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஆகியோர் அகழாய்வு செய்த இடத்தையும், கிடைக்கப்பெற்ற தொல் பொருட்களையும் நேரில் பார்வையிட்டனர்.

 இந்த நிலையில், 4-ம்கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் பொக்லைன் இயந்திரம் மூலம்  மூடப்பட்டன.

 அங்கு கிடைத்த தொல் பொருட்கள் முழுவதும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, மதுரையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது எனவும், இன்னும் ஓரிரு மாதங்களில் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 4-ம் கட்ட அகழாய்வுப் பணிகளில் கிடைத்த தொல் பொருட்களை பொதுமக்கள் பார்வைக்காக வைக்க உள்ளது எனவும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

by   on 16 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.