|
|||||
மினி சிலிண்டரை நாடு முழுவதும் விற்பனை செய்ய - மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி !! |
|||||
சமீபத்தில் ஐந்து மெட்ரோ நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட மினி காஸ் சிலிண்டர்களின் விற்பனைக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பை அடுத்து, இந்த திட்டத்தை நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் செயல்படுத்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அனுமதித்துள்ளது.
கடந்த அக்டோபர் 5 ம் தேதி, சோதனை அடிப்படையில் 5 கிலோ சிலிண்டர்களை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய ஐந்து மெட்ரோ நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த மகத்தான வரவேற்ப்பை அடுத்து, 24 மணி நேரமும், நாடு முழுவதுமுள்ள பெட்ரோல் பங்க்குகளில், இந்த மினி காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்ய, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நேற்று அனுமதி அளித்துள்ளது.
விரிவுபடுத்தப்பட்ட இந்த திட்டத்தின்படி, சந்தை விலையில் 5 கிலோ எடை கொண்ட மினி சிலிண்டர் வாங்க விரும்பும் வாடிக்கையாளர், அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களை பெட்ரோல் நிலையங்களில் காட்டி பதிவு செய்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் ரெகுலேட்டர் அல்லது ரெகுலேட்டர் அல்லாத சிலிண்டர் பெற, முதல் முறை தொகையாக ரூ. 1000 மற்றும் வரித் தொகையாக ரூ. 250 செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து, சந்தையில் விற்கப்படும் மானியம் அல்லாத கட்டணத்தை செலுத்தி அவர் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரைப் பெறலாம்.
வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்கள், இடமாற்றலாகி வந்தோர், மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள், பிபிஓ நிறுவனங்களில் பணிக்கு செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் இத்திட்டம் மிகுந்த பயன் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த மினி சிலிண்டர் விற்பனை, சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் டெல்லி, மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் , ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த பின்னர் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 04 Nov 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|