LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மினி சிலிண்டரை நாடு முழுவதும் விற்பனை செய்ய - மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி !!

சமீபத்தில் ஐந்து மெட்ரோ நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட மினி காஸ் சிலிண்டர்களின் விற்பனைக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பை அடுத்து, இந்த திட்டத்தை நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் செயல்படுத்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அனுமதித்துள்ளது.

 

கடந்த அக்டோபர் 5 ம் தேதி, சோதனை அடிப்படையில் 5 கிலோ சிலிண்டர்களை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய ஐந்து மெட்ரோ நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த மகத்தான வரவேற்ப்பை அடுத்து, 24 மணி நேரமும், நாடு முழுவதுமுள்ள பெட்ரோல் பங்க்குகளில், இந்த மினி காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்ய, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நேற்று அனுமதி அளித்துள்ளது. 

 

விரிவுபடுத்தப்பட்ட இந்த திட்டத்தின்படி, சந்தை விலையில் 5 கிலோ எடை கொண்ட மினி சிலிண்டர் வாங்க விரும்பும் வாடிக்கையாளர், அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களை பெட்ரோல் நிலையங்களில் காட்டி பதிவு செய்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் ரெகுலேட்டர் அல்லது ரெகுலேட்டர் அல்லாத சிலிண்டர் பெற, முதல் முறை தொகையாக ரூ. 1000 மற்றும் வரித் தொகையாக ரூ. 250 செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து, சந்தையில் விற்கப்படும் மானியம் அல்லாத கட்டணத்தை செலுத்தி அவர் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரைப் பெறலாம். 

 

வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்கள், இடமாற்றலாகி வந்தோர், மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள், பிபிஓ நிறுவனங்களில் பணிக்கு செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் இத்திட்டம் மிகுந்த பயன் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த மினி சிலிண்டர் விற்பனை, சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் டெல்லி, மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் , ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த பின்னர் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Swathi   on 04 Nov 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.