LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப்பணிகள் ஒரு வாரத்தில் துவங்கும்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

கீழடியில் 5- ம் கட்ட ஆய்வுப்பணிகள் ஒரு வாரத்தில் துவங்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார். 

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் வீரகற்கள், நடுகற்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதை பாதுகாக்க இந்த ஆண்டு ஒரு திட்டத்தை தீட்டியுள்ளோம்.  

இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் மட்டும் தான் 2 நாட்களுக்கு ஒரு புதையல் வீதம் கிடைத்து வருகிறது. அப்படிக் கிடைத்த புராதனச் சின்னங்களை, தமிழ்  வளர்ச்சித் துறை மூலம் 91 இடங்களில் பாதுகாத்து வருகிறோம். இன்னும் 12 புராதன சின்னங்களை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  

தமிழகத்தில் செஞ்சிக்கோட்டை உட்பட 12 கோட்டைகளை மேம்படுத்த ரூ. 24 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்பட  உள்ளது. 

கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப்பணிகள், இன்னும் ஒரு வாரத்தில் துவங்கப்பட உள்ளது. தமிழக அரசு கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய 3 பகுதிகளிலும் அகழ்  வைப்பகங்களை விரைவில் உருவாக்க உள்ளது. 

அரியலூரில் ஒரு அருங்காட்சி யகத்தை முதல்வர் துவக்க உள்ளார். ஒரு மாவட்டத்திற்கு ஒரு  அருங்காட்சியகம் என முடிவெடுத்து இருக்கிறோம். இந்த ஆண்டு 2 புதிய அருங்காட்சியகங்கள் தொடங்கப்பட உள்ளது. 

நெடுமணல், கீழடி, திருவள்ளூர்  மாவட்டத்தில் உள்ள பட்டரைப் பெரும்புதூர் ஆகிய 3 இடங்களிலும், அகழ்வாராய்ச்சிகள் நடைபெற உள்ளது.  

மத்திய அரசின் நிதியைப் பெற்று,  தமிழகத்தில் இருக்கும் பாரம்பரியப் பொருட்கள் மற்றும் புராதனச் சின்னங்களை பாதுகாக்கும் பணிகளை வேகமாக செய்வோம். 

இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

by   on 04 Jun 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.