LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

6 வயது முதல் 14 வயது வரை அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி புதிய சட்டம் இன்று முதல் அமல்

6 வயது முதல் 14 வயது வரை அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி புதிய சட்டம் இன்று முதல் அமல்
     6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை உரிமை என்று கடந்த 2002-ம் ஆண்டு மத்திய அரசு சட்டத் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. 86-வது சட்ட விதியில் செய்யப்பட்ட இந்த திருத்தம் காரணமாக எதிர் காலத்தில் ஒவ்வொரு இந்தியனும் கல்வி அறிவுப் பெற்றவராக இருப்பார்கள் என்பது குறிப் பிடத்தக்கது. பாராளுமன் றத்தில் இந்த சட்டத்திருத்தத் துக்கு கடந்த ஆண்டு ஒப்பு தல் பெறப்பட்டது.
     பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏற்கனவே தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத் திருத்தம் ஆகியவற்றை கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது.
     அந்த வரிசையில் அனைத் துக் குழந்தைகளுக்கும் கட் டாய இலவச கல்வி கொடுக் கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சட்டத் திருத்தம் செய்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அடிப்படை உரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளது குறிப் பிடத்தக்கது.
     வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சட்டத்திருத்தம் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 1 கோடி குழந்தைகள் பயன்பெறுவார்கள். அதற் காக 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளை யும் பள்ளிக்கு அனுப்புவதை மாநில அரசுகள் மற்றும் உள் ளாட்சி அமைப்புகள் உறுதி செய்து கொள்ள உத்தர விடப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுக்குட் பட்டவர்கள் சுமார் 22 கோடி பேர் உள்ளனர். இவர் களில் சுமார் 1 கோடி குழந் தைகள் பல்வேறு காரணங் களால் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் புதிய சட்டம் மூலம் இலவசமாக, கட்டாய மாக கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
    ஒவ்வொரு ஊரிலும் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகளில் யார், யார்? பள்ளிக்கு செல்ல வில்லை என்பதை அந்தந்த பகுதி பள்ளிக் கூடங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் கணக்கெடுப்பு நடத்தி கண்டு பிடிக்கும். பிறகு சிறுவர்கள், அவர்கள் வயதுக்கு ஏற்ப உரிய வகுப்புகளில் சேர்க் கப்படுவார்கள். இதற்காக சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்படும்.
     இது தவிர கல்வி பெறு வதை அடிப்படை உரிமை யாக்கும் சட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் சேவைக்கும் சில அம்சங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி பொருளாதாரத் தில் மிகவும் பின்தங்கியவர் களுக்கு தனியார் பள்ளி களில் 25 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதனால் கிரா மங்களில் வாழும் ஏழை- எளியவர்களின் குடும் பத்து குழந்தைகள் கல்வி பெறுவது 100 சதவீதம் உறுதிப் படுத் தப்பட்டுள்ளது.
     இந்த 25 சதவீத இட ஒதுக் கீட்டை எதிர்த்து சில தனியார் பள்ளிகள், மானியம் பெறாத பள்ளிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. பள்ளிகளின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகை யில் இந்த சட்டம் இருப்பதாக தனியார் பள்ளிகள் தங்கள் மனுவில் கூறி உள்ளன. என்றாலும் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் எந்த சட்டச் சிக்கலும் வராது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில்சிபல் கூறினார்.
     2010-11ம் கல்வி ஆண்டுக் கான சேர்க்கைகள் நாடெங் கும் பெரும்பாலும் நடந்து முடிந்து விட்டது. எனவே தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகள் கல்வி பெற 25 சதவீத இடம் ஒதுக் குவது அடுத்த கல்வி ஆண்டு (2011-12) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.
     ஆண், பெண் வித்தியாச மின்றி அனைத்து சிறுவர்- சிறுமி களும் பயன் பெறும் இந்த திட்டத்துக்கான மொத்த செலவில் 55 சதவீ தத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். மாநில அரசுகள் 45 சதவீத செலவை ஏற்கும் மாநில அரசுகள் இந்த சட்டத்தை இடையூறின்றி நிறைவேற்றுவதற்காக மத்திய நிதிக் கமிஷன் ரூ.25 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது.
     மத்திய அரசின் கணக் கீட்டுப்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு குழந்தை களுக்கு கட்டாய, இலவச கல்வி கொடுக்க 1.71 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று தெரிய வந்துள்ளது. நாடெங்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி கொடுத்தே தீர வேண்டும் என்று அரசு தீவிரமாக உள்ளதால் 1.71 லட்சம் கோடி நிதியை திரட்டி விட்டதாக மத்திய மந்திரி கபில்சிபில் கூறினார்.
     கல்வி உரிமைச் சட்டத்தின் படி எந்த ஒரு பள்ளியும் 6 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமி களை சேர்க்க இயலாது என்று சொல்ல முடியாது. மேலும் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க பயிற்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஒரு வேளை திறமையான ஆசிரியர்கள் இல்லை யெனில் 3 ஆண்டு களுக்குள் நியமித்து விட வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது.
     மேலும் எல்லா பள்ளிக் கூடங்களிலும் போதுமான அளவுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் விளையாடு வதற்கு ஏற்ற மைதானம் மற்றும் கட்டமைப்புகள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற விதிகளை அந் தந்த மாநில அரசுகள் உரு வாக்கிக் கொள்ள மத்திய அரசு கூறியுள்ளது. சில மாதிரி விதிகளையும் மத்திய அரசு உருவாக்கி, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத் துள்ளது.
     யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளுக்கு என தனி விதிமுறைகளை மத்திய அரசு தயாரித்துள்ளது. அந்த விதிகளை சட்ட அமைச்சகம் அடுத்த வாரம் வெளியிட உள்ளது.
     புதிய மாதிரி விதிப்படி, உள்ளாட்சி அமைப்புகள், ஒவ்வொரு வீட்டிலும் சர்வே செய்து 6 முதல் 14 வயது வரை குழந்தைகள் பற்றி தக வல்கள் சேகரிக்கும். பிறகு அருகில் உள்ள பள்ளிக் கூடம் மற்றும் அதில் உள்ள இட வசதிகளை ஆய்வு செய் யும். இதன் மூலம் அனைத் துக் குழந்தைகளும் பள்ளிக்கு செல்வது உறுதிப்படுத் தப்படும்.
சாதி, மதம், ஆண், பெண் போன்ற பேதங்கள் பார்க் காமல் குழந்தைகள் அனை வரும், பள்ளிக்கு செல்வது கட்டாயமாக்கப்படும்.
     25 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று தனியார் பள்ளிகளில் சேரும் குழந்தைகள், பிரித்து விட்டவர்கள் போல தனி யாக நடத்தப்பட கூடாது என்பதை உறுதி செய்ய வும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது. மேலும் எல்லா குழந்தைகளுக்கும் ஏனோ, தானோ என் றில் லாமல் தரமான கல் வியை பெற வேண்டும் என்று புதிய சட்டத்தில் வலியுறுத்தப்பட் டுள்ளது.
இவை தவிர ஏழைக் குழந்தைகள் நடந்து செல்லும் தூரத்துக்குள் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் நடந்து சென்று படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழை-எளியவர்களின் எதிர்கால வாழ்வில் ஒளி யேற்றப் போகும் இந்த புதிய சட்டம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு குறும்படம் தயாரித்துள்ளது. இந்த குறும் படங்கள் தனியார் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க சட்டமான, ஆறிலிருந்து 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு 'கல்வி அடிப்படை உரிமை மற்றும் கட்டாயக் கல்வி' சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. 
     நாடு முழுவதும், ஆறு வயதிலிருந்து 14 வயது வரை 22 கோடி குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் 92 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை அல்லது பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டிருக்கின்றனர்.இந்நிலையில், ஆறிலிருந்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அடிப்படை உரிமையாக கல்வி அமையும் என்று வலியுறுத்துகிறது. இச்சட்டம், இவர்களுக்கு கல்வி கிடைப்பதையும், மாநில அரசு இவர்களுக்கு கல்வி வழங்குவதையும் உறுதி செய்கிறது.கடந்த 2002ல் அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட 86வது திருத்தத்தின் படி, கல்வி அடிப்படை உரிமை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
     பின், 2009ல் இச்சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள பல்வேறு பிரச்னைகளையும் கலந்து ஆலோசித்த பின், மத்திய அரசும், மாநில அரசுகளும் 55:45 என்ற வீதத்தில் இதற்காகும் செலவை ஏற்றுக் கொள்வது என்று முடிவு செய்தபின், மாநில அரசுகள் இச்சட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.
தனியார் கல்வி நிறுவனங்கள், சமூகத்தின் பின்தங்கிய பிரிவின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் ஒதுக்க இச்சட்டம் வகை செய்கிறது. இச்சட்டத்தை நிறைவேற்ற, 25 ஆயிரம் கோடி ரூபாயை மாநில அரசுகளுக்கு நிதிக் கமிஷன் ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுகளில் இச்சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமானால், ஒரு லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக அரசின் திட்ட மதிப்பீடு கூறுகிறது.
     இச்சட்டத்தை எதிர்த்து சில பள்ளிகள், 'இது அரசு நிதியுதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையில் தலையிடுவதாகும்' என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதனால், இச்சட்ட அமலாக்கத்தில் எவ்வித தொய்வும் ஏற்படாது என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
by Swathi   on 22 Sep 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி
இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது! இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது!
கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை! கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.