LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் பரப்புரை முயற்சிகள்

தமிழக முதல்வர் வெளியிட்ட குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகள்!


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கன்னியாகுமரியில், முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் பங்கேற்றார்.  திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்னூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்ததோடு திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரையும் வெளியிட்டார்.  மேலும் திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பரிசுத் தொகை வழங்கி சிறப்பித்ததோடு திருக்குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டார். 

அந்த  6 அறிவிப்புகள் இதோ!

1. புதிய படகுகள்:

சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலையைச் சென்றடையப் படகுச் சவாரி வசதியை மேம்படுத்துவதற்காக 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும்.  புதிதாகப் பெருந்தலைவர் காமராஜர், தென்குமரியைத் தமிழகத்துடன் இணைக்கப் போராடிய மார்ஷல் நேசமணி, திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு.போப் பெயர்கள் இந்தப் படகுகளுக்குச் சூட்டப்படும்.

2. ஆசிரியர்களுக்குப் பயிற்சி:

திருக்குறளில் ஆர்வம், புலமை மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். திருக்குறள் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறத் திட்டம் வகுக்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு மாவட்டம் ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

3.  அறிவுசார் போட்டிகள்: 

ஆண்டுக்கு 133 உயர்கல்வி நிறுவனங்களில், திருக்குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தத் திட்டமிடப்படும். 

4. குறள் வாரம்

 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் 'குறள் வாரம்' கொண்டாடப்படும்.

5.  திருக்குறள் மாநாடு

தமிழ்த் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்.

6.  குறள், உரை:

திருக்குறளும், உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்படுகிறது போல, தனியார் நிறுவனங்களிலும் எழுதுவதற்கு, ஊக்குவிக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 

by hemavathi   on 02 Jan 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியர் திரு.கோவிந்தசாமி செயராமன்   நேரில் நூலை வழங்கினார் திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியர் திரு.கோவிந்தசாமி செயராமன் நேரில் நூலை வழங்கினார்
பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த பேராசிரியர்.ச. சச்சிதானந்தம் அவர்கள் பிரென்ச் மொழியில் மொழிபெயர்த்த திருக்குறள் நூலின் பிரதியை வழங்கினார் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த பேராசிரியர்.ச. சச்சிதானந்தம் அவர்கள் பிரென்ச் மொழியில் மொழிபெயர்த்த திருக்குறள் நூலின் பிரதியை வழங்கினார்
மலேசியாவில் Thirukkural Translations in World Languages நூல் மிகச்சிறப்பாக வெளியிடப்பட்டது மலேசியாவில் Thirukkural Translations in World Languages நூல் மிகச்சிறப்பாக வெளியிடப்பட்டது
திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பை தொகுப்பில் சேர்க்க கையளித்தார் ரஷ்ய தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.சேகர் சாமியப்பன் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பை தொகுப்பில் சேர்க்க கையளித்தார் ரஷ்ய தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.சேகர் சாமியப்பன்
உலகின் அதிக மக்கள் பேசும் மொழியாகிய ஸ்பானிஸ் மொழிபெயர்ப்பு தொகுப்பில் சேர்க்கப்பட்டது உலகின் அதிக மக்கள் பேசும் மொழியாகிய ஸ்பானிஸ் மொழிபெயர்ப்பு தொகுப்பில் சேர்க்கப்பட்டது
பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் 13 நாடுகளில் 28 மொழிகளில் மொழிபெயர்க்கப்படவேண்டிய திருக்குறள் கோரிக்கையை முன்வைத்தோம். பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் 13 நாடுகளில் 28 மொழிகளில் மொழிபெயர்க்கப்படவேண்டிய திருக்குறள் கோரிக்கையை முன்வைத்தோம்.
நேற்று தென்னாப்பிரிக்காவின் iszulu (ஸுலு )மொழியில் டி.மூடலி அவர்கள் மொழிபெயர்த்த திருக்குறள் நூல் நம் தொகுப்பில்  சேர்ந்தது. நேற்று தென்னாப்பிரிக்காவின் iszulu (ஸுலு )மொழியில் டி.மூடலி அவர்கள் மொழிபெயர்த்த திருக்குறள் நூல் நம் தொகுப்பில் சேர்ந்தது.
இதுவரை திருக்குறள் மொழிபெயர்க்கப்படாத மொழி ஒன்றில் மொழிபெயர்க்க அழைக்கிறோம்.. இதுவரை திருக்குறள் மொழிபெயர்க்கப்படாத மொழி ஒன்றில் மொழிபெயர்க்க அழைக்கிறோம்..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.