|
||||||||
அமெரிக்காவில் விசா காலம் முடிந்தபிறகும் தங்கியிருக்கும் 7000 இந்திய மாணவர்கள் |
||||||||
அமெரிக்காவில் 7,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சட்டவிரோதமாக தங்கி உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார் அமெரிக்கக் குடியேற்றக் கல்வி மையத்தைச் சேர்ந்த ஜெசிகா எம்.வேகன்.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில எப் 1 விசா வழங்கப்படுகிறது. இதேபோல கல்விச் சுற்றுலா வரும் வெளிநாட்டு மாணவ, மாணவியருக்கு எம் 1 விசா வழங்கப்படுகிறது.
"இந்தியா, சீனா, பிரேசில், கொலம்பியா நாடுகளிலிருந்து எப்1, எம்1 விசா பெற்று அமெரிக்கா வரும் மாணவர்கள் விசா காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கி உள்ளனர்.
இதில் மிக அதிகபட்சமாக இந்தியாவைச் சேர்ந்த சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கின்றனர். எச்1பி விசா பெற்றும் அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினரும் விசா காலம் முடிந்த பிறகும் இங்கேயே தங்கி உள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு ஜெசிகா எம்.வேகன் தெரிவித்துள்ளார்.
|
||||||||
by hemavathi on 02 Feb 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|