ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் தங்களுக்கு விருப்பமான நாடுகள் குறித்து அந்நாட்டு மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவது வழக்கம். அதுபோல் இந்தாண்டும் கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த கருத்து கணிப்பு 50 அமெரிக்க மாநிலங்களில் வாழும் 18வயதுக்கு மேற்பட்ட சுமார் ஆயிரத்து 23 பேர்களிடம் நடத்தப்பட்டது.
இந்த கணக்கெடுப்பில் சுமார் 72 சதவீத அமெரிக்க மக்கள் இந்தியாவை விருப்ப நாடாக தேர்வு செய்துள்ளனர்.இது கடந்த ஆண்டை காட்டிலும் 4 சதவீத அளவு அதிகமாகும். அதே நேரத்தில் பாகிஸ்தானை விருப்ப நாடாக தேர்வு செய்துள் ளவர்களின் எண்ணி்க்கை 17 சதவீதமாகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகாடே கைது விவகாரத்திற்கு பின்னர் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. தேவ்யானி கோப்ரகாடே தனது வீ்ட்டு வேலைக்காரி யின்விசா விண்ணப்பத்தில் நிரப்பப்பட்ட தவறான தகவல்கள் காரணமாக அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனால் இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்படும் நிலை உருவானது. இருப்பினும் அமெரிக்கர்கள் தங்களது விருப்ப நாடாக இந்தியாவை தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
|