LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அரசுப் பள்ளிகளில், 8ம் வகுப்பு வரை, சீருடைகள் மாற்றம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

"அரசுப்பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை, சீருடைகள் மாற்றப்படும்" என  பள்ளி கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி.பெறும் பள்ளிகளில், 1 முதல், 5ம் வகுப்பு வரை தனி சீருடையும், 9, 10ம் வகுப்புகளுக்கு தனி சீருடையும்; பிளஸ் 1, பிளஸ் 2க்கு தனி சீருடையும் அறிமுகம் செய்யப்பட்டன. 6  முதல் 8-ம்  வகுப்பு வரை மட்டும், சீருடை மாற்றம் செய்யப்படவில்லை.

இதில், 1 முதல், 5ம் வகுப்பு வரையில், இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய சீருடை, மாணவர்களின் தோற்றத்தை சிறப்பாக காட்டவில்லை என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, மீண்டும் 1 முதல், 5ம் வகுப்பு வரையான, சீருடைகளின் நிறமும், வடிவமும் மாற்றப்பட்டு உள்ளது. அதேபோல், 7 ஆண்டுகளாக, ஒரே சீருடை அமலில் உள்ள, 6 முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், இந்த ஆண்டு அமலுக்கு வந்துள்ள, சீருடை தொடரும்.

'இந்த சீருடை திட்டம், வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.  எனவே, அடுத்த ஆண்டு முதல், 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மொத்தம் நான்கு வகை சீருடைகள் அமலாகின்றன.

இதில், 1 முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அரசின் சார்பில், இலவசமாக சீருடைகள் வழங்கப்படும்.மற்ற வகுப்பினருக்கு, சீருடைக்கான தொகை வழங்கப்படும்; அவர்களே தைத்துக் கொள்ள வேண்டும்.

ஐ.சி.டி., என்ற, தகவல் தொழில்நுட்ப வழி கல்வி வகுப்பறை திட்டம், இந்த மாத இறுதிக்குள் துவங்கப்படும். மேலும், 3,000 பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், 'ஸ்மார்ட்' வகுப்பறை அமைக்கும் திட்டம், நவ., இறுதிக்குள் அமலுக்கு வரும். வணிகவியல் மாணவர்களுக்கான,'சி.ஏ., ஆடிட்டர்' தேர்வுக்கான இலவச பயிற்சி, அடுத்த மாதம் துவங்க உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், புறநகர் பகுதிகளில் உள்ள, அரசு பள்ளி மாணவர்கள், இலங்கைக்கு சென்று, கராத்தே போட்டியில் பங்கேற்க, நிதி உதவி அளிக்கப்பட்டு உள்ளது.அங்கன்வாடிகளில் படிக்கும் 72 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட உள்ளனர். சமூக நலத்துறையுடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பள்ளி மாணவர்களிடம், சிறு சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில், மீண்டும், 'சஞ்சாயிகா' சிறு சேமிப்பு திட்டம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

by Mani Bharathi   on 04 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.