வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக சுதந்திர போர் நடைபெற்ற போது, கொலை மற்றும் பல கொடுமைகளை அரங்கேற்றிய 91 வயது தாத்தாவுக்கு 90 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்து உள்ளது. கடந்த 1971ல் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசத்தில் விடுதலைப் போர் நடைபெற்றது.அப்போது அந்நாட்டின் ஜமாத் -இ- இஸ்லாமி தலைவராக இருந்த குலாம் அசம் வங்கதேசத்தில் துணை ராணுவப் படையை உருவாக்கி பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதுடன் கொலை மற்றும் கொடுமைகளை அரங்கேற்றியதாக புகார் கூறப்பட்டது. போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர் மீது சர்வதேச தீர்ப்பாயம் கொலை மற்றும் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட 61 குற்றச்சாட்டுகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த, சர்வதேச தீர்ப்பாய நீதிபதி குலாம் அசமிற்கு 90 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
|