LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- கருத்துகளும்-ஆய்வுப் பின்புலமும் (Tamil Fact Check)

மணிமேகலை அமுத சுரபி நாள் - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா?

'அமுத சுரபி நாள்'

இன்று அட்சயதிதி என்று சொல்லி , நகைக்கடைகளில் நகை வாங்கக் கூட்டம் அலை மோதுகின்றது. உண்மையில் இந்த நாளுக்கும் நகைக்கும் எந்தத் தொடர்புமில்லை. 'குன்றிமணி அளவு தங்கம் வாங்கினாலும் அது குன்று போலப் பெருகும்' என ஒரு கும்பல் அடித்து விடுகின்றது. சென்ற ஆண்டுகளில் குன்றிமணி ( குன்றிமணி > குண்டுமணி) அளவு தங்கம் வாங்கிய எத்தனை பேருக்கு இப்போது குன்று ( மலை) அளவுக்குத் தங்கம் பெருகியுள்ளது என ஏதாவது தரவுகள் இருக்கின்றதா? கடந்த ஆண்டுகளில் வாங்கியவர்களாவது நினைத்துப் பாருங்கள்!
மணிமேகலை 'அமுதசுரபி' எனும் திருவோட்டினை ஈழத்தின் மணிபல்லவத்தில் பெற்றுக் கொண்ட நாளே இன்றைய நாளாகும். 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ' என்ற பழந் தமிழ் மரபுக்கமைய, பசிப்பிணி போக்குவதே இன்றைய நாள். எனவே ஏழைகளுக்கு உதவுவதும், பசிப்பிணி போக்குவதுமே இன்றைய நாளில் செய்யப்பட வேண்டியவை; மற்றும்படி தங்க நகைக்கும் இந்த நாளுக்குமான தொடர்பு எல்லாம் பிற்கால இட்டுக்கட்டுதல் கதை.

'அட்சயதிதி ', 'அட்சய பாத்திரம்' ஆகிய பிற மொழிச் சொற்களைத் தவிர்த்து, முறையே 'அமுதசுரபி நாள்' , 'அமுதசுரபி' போன்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் போது; இந்த நாளினை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்ற தெளிவு மக்களுக்குக் கிடைக்கும்.

🙏 'அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள்! மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் இலது கண்டதில்' 🙏

 

-------------------------தேமொழி , கலிபோர்னியா, பதில்------------------------------------- 

//// மணிமேகலை 'அமுதசுரபி' எனும் திருவோட்டினை ஈழத்தின் மணிபல்லவத்தில் பெற்றுக் கொண்ட நாளே இன்றைய நாளாகும். ////

கருத்துப் பிழை:
அட்சய திரிதியை (குறைவற்ற மூன்றாம் நாள்) என்பது வளர்பிறை மூன்றாம் நாள் (திரிதியை = மூன்றாம் நாள்). இதற்கும் மணிமேகலை அமுதசுரபி என்ற அட்சய பாத்திரம் பெற்ற கதைக்கும் தொடர்பில்லை.

மணிபல்லவம் தீவில் மணிமேகலைக்கு (ஆபுத்திரன் பொய்கையில் எறிந்த) அமுதசுரபி கிடைத்த நாள் வைகாசி விசாகம் முழு நிலவு நாள்.
அதாவது, வரும் மே 12, 2025 வைகாசி விசாகம் / புத்த பூர்ணிமா நாள் முழுநிலவு நாள், இது வட இந்திய நாட்காட்டி கணக்கு முறை; பார்க்க:https://www.drikpanchang.com/panchang/month-panchang.html?date=12/05/2025)

புத்தர் இவ்வுலகில் அவதரித்த திருநாளாகவும், அவர் ஞானம் பெற்ற நாளாகவும் இந்தப் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.

மணிபல்லவத்தீவின் 'கோமுகி' என்னும் பொய்கையிலிருந்து 'அமுத சுரபி' என்னும் அட்சயபாத்திரம் ஒவ்வோர் ஆண்டும் வைகாசித் தூய நிறைமதி நாளில் தோன்றும்; அதில் இட்ட அமுதம் கொள்ளக் கொள்ளக் குறையாது வளர்ந்துகொண்டே இருக்கும் என அப்பகுதியைக் காத்து நிற்கும் தீவதிலகை மணிமேகலையிடம் கூறுகிறாள். இதுதான் மணிமேகலை காப்பியத்தில் உள்ள தகவல்.
(ref : https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0017366_மணிமேகலை.pdf)
வைகாசி விசாகா நாள் என்பது வேறு, அட்சய திரிதியை நாள் என்பது வேறு.

by Swathi   on 01 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள் மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள்
தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும் தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்
செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும் செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும்
தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ? தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ?
It seems Tamil is the only group that does not use a borrowed word to say language. It seems Tamil is the only group that does not use a borrowed word to say language.
தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு
நீங்கள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி சொல்வீர்களோ அல்லது சித்திரைத் திருநாள் என்று சொல்வீர்களோ- ஒற்று போடுங்கள் நீங்கள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி சொல்வீர்களோ அல்லது சித்திரைத் திருநாள் என்று சொல்வீர்களோ- ஒற்று போடுங்கள்
தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் எத்தனை தமிழ் மாதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் எத்தனை தமிழ் மாதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.