LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

சினிமாக்காரர்களை கொண்டாடும் அளவுக்கு வெற்றிபெற்ற தொழிலதிபர்களை மக்கள் கொண்டாடுவதில்லையா?

சினிமாக்காரர்களை கொண்டாடும் அளவுக்கு வெற்றிபெற்ற தொழிலதிபர்களை மக்கள் கொண்டாடுவதில்லை என்று பொதுவாகக் கூறுவதுண்டு.
நான் அப்படி பார்க்கவில்லை, சமூகப்பொறுப்போடும், சமூகத்திற்கு பயனுள்ள பங்களிப்புகளை தான் சேர்த்த செல்வத்தில் அவ்வப்போது செய்துகொண்டு பயணிக்கும் தொழிலதிபர்களை மக்கள் தொடர்ந்து கொண்டாடவே செய்கிறார்கள்.
டாடா இறப்பை இவ்வளவு மக்கள் கூர்ந்து கவனிப்பதும், பேசுவதும் எழுதுவதும் அவரது சமூக நோக்குள்ள தொழில் மனோபாவம்தான். தமிழ் தொழில் முனைவோர் கூட்டங்களில் பேசும்போது நான் தவறாமல் குறிப்பிடுவது, தொழில் செய்யும் ஒவ்வொருவரும் ஒரு சிறு அறக்கட்டளையை உருவாக்கி நம் வருமானத்தில் ஒரு பகுதியை முறையாக மக்களுக்கு தெரியும் வகையில் வெளிப்படையாக நமக்குப் பிடித்ததை , நாம் நம்பும் சமூகப் பங்களிப்பை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யவேண்டும் என்பதாகும்.
 
அப்படி செய்பவர்களை சமூகம் என்றும் நினைவில் வைத்து போற்றும். அவர்களை ஒரு நடிகர்களுக்கு கொடுக்கும் தற்காலிக முக்கியத்துவத்தைவிட நிரந்தரமாக கொடுக்கிறது என்பதே உண்மை.
 
வளர்ந்துவரும் தொழில் முனைவோர்கள் இதை கூர்ந்து உள்வாங்கவேண்டும். செல்வத்தின் பயனே ஈதல் என்பதும் , நம்மை ஏற்றிவிட்ட இந்த சமூகத்திற்கு நாம் சமரசமின்றி ஒரு அடையாளத்தை விட்டுச் செல்லும் வகையில் குறிப்பிட்ட ஒரு துறையை எடுத்து வளர்த்துவிட துணைநிற்கவேண்டும் என்பதும் அவசியம். மொழி, கலை , வாழ்வியல், கிராம வளர்ச்சி என்று ஏதாவது ஒரு பிடித்த பகுதியில் அடர்த்தியாக, தொடர்ச்சியாக ஒரு விளைவை ஏற்படுத்த நம் Corporate social Responsibility (CSR ) சேவைகளை செய்யவேண்டும் என்று திட்டமிடுவது அவசியமாகிறது.
 
உதாரணத்திற்கு

தமிழ்நாட்டில் அண்ணாமலை அரசர் பண்ணிசை ஆராய்ச்சி குறித்தும் , தமிழிசை வளர்ச்சி குறித்தும் கொண்ட ஆர்வமும் பங்களிப்பும் எவ்வளவு பொருளாதாரம் சேர்த்தார் என்பதைவிட இன்றும் நிலைத்து நிற்கிறது.
 
அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் செய்த தமிழ்ப்பணி, சமுகப்பணி அவர் என்ன நிறுவனம் நடத்தினார், எவ்வ்ளவு பொருள் சேர்த்தார் என்பவை தாண்டி இன்றும் நிலைத்து நிற்கிறது.
 
இதுபோன்று உங்கள் மனதில் நிற்கும் காலம்சென்ற, வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் தொழிலதிபர்களை குறிப்பிடவும்..
 
 
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
 
 
 
by Swathi   on 16 Nov 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.