LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வளைகுடா நாடுகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் திருமணச் சட்ட விதிகளில் மாற்றம்

 

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான  ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, அஜ்மன், துபாய், ஃபுஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா, உம் அல் குவைன் ஆகிய அமீரகங்கள் அடங்கியுள்ளன.  அரபு நாடுகளில் பொதுவாகச் சட்டங்கள் மிகக் கடுமையாக இருக்கும். மீறினால் தண்டனைகளும் கெடுபிடியாகத் தான் அளிக்கப்படும்.


இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் திருமணம் தொடர்பான சட்ட விதிகளில் மாற்றங்கள் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. அதில் மிக முக்கியமானது விருப்பத்திற்கு ஏற்ப முடிவெடுத்தல். அதாவது, பெண்கள் திருமணம் செய்து கொள்ளக் குறைந்தபட்ச வயது 18. பதினெட்டு  வயதைப் பூர்த்தி செய்துவிட்டால் பெண்கள் விரும்பும் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம்.


ஒருவேளை பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்து கொள்வதில் தடை ஏதும் இல்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகி பெண்கள் நீதி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண விஷயத்தில் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ அதிகாரம் செலுத்தக் கூடாது. திருமணம் செய்து கொள்ளும் ஆணிற்கும், பெண்ணிற்கும் இடையிலான வயது வித்தியாசம் 30க்கும் மேல் இருந்தால் உடனே நீதிமன்றத்தை அணுக வேண்டும்.


நீதிமன்ற அனுமதி உடன் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். நிச்சயதார்த்தம் என்பது பெண்ணின் முழுச் சம்மதத்துடன் தான் நடைபெற வேண்டும். திருமணத்திற்கான உறுதி அளிக்கப்பட்ட பின்னரே நிச்சயதார்த்தம் செய்ய வேண்டும். அதேசமயம் நிச்சயதார்த்தம் செய்துவிட்டாலே திருமணம் ஆகிவிட்டது என்று கருதக் கூடாது. பரிசுப் பொருட்கள் தர வேண்டும் என்ற கட்டுப்பாட்டின் கீழ் திருமணம் உறுதி செய்யப்பட்டால் அந்தப் பரிசைத் திருப்பித் தந்துவிட வேண்டும்.


இது 25 ஆயிரம் திர்ஹாம்களுக்கு மேல் மதிப்பு கொண்ட பரிசுப் பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தால், அந்தக் குழந்தைகளை ஒருமித்த சம்மதத்தின் பேரில் புதிய வாழ்க்கையில் வைத்துக் கொள்ள உரிமை உண்டு.
இந்தக் குழந்தைகளின் பொருளாதார விஷயங்களைப் பெண்ணின் கணவர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பல்வேறு திருத்தங்கள் திருமண சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

 

 

by hemavathi   on 23 Feb 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் காலதாமதம் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் காலதாமதம்
நாசாவில் பணியாற்றிய 23 பேர் பணி நீக்கம் நாசாவில் பணியாற்றிய 23 பேர் பணி நீக்கம்
இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்புவோம் -  கனடாவின்  புதிய பிரதமர்  மார்க் கார்னி இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்புவோம் - கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர்   மார்ச் 19  அல்லது  20 -ல்  பூமிக்குத் திரும்புகிறார்கள்  - நாசா அறிவிப்பு சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மார்ச் 19 அல்லது 20 -ல் பூமிக்குத் திரும்புகிறார்கள் - நாசா அறிவிப்பு
பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான  தங்கப் படிமம் பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கப் படிமம்
பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான  தங்கப் படிமம் பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கப் படிமம்
இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் - டொனால்ட் ட்ரம்ப் இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் - டொனால்ட் ட்ரம்ப்
கனடா மெக்சிகோ மீதான 25% இறக்குமதி வரி அமலுக்கு வந்தது- பதிலடி தருவோம் என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை! கனடா மெக்சிகோ மீதான 25% இறக்குமதி வரி அமலுக்கு வந்தது- பதிலடி தருவோம் என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.