|
||||||||
ஊழியர்களுக்கு 70 கோடி ஊக்கத்தொகை வழங்கிய சீன நிறுவனம் |
||||||||
சீனாவைச் சேர்ந்த கிரேன் நிறுவனம் ஒன்று ஆண்டு இறுதி ஊக்கத்தொகையாக, ஊழியர்களுக்கு ரூ.70 கோடியை வாரி வழங்கிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த ‘ஹெனான் மைனிங் கிரேன் நிறுவனம்’ ஆண்டு இறுதியில் தனது ஊழியர்களுக்குத் தாராளமாக ஊக்கத்தொகை அறிவிக்கும். இந்த ஆண்டு இறுதி ஊக்கத்தொகையாக ரூ.70 கோடியை அறிவித்தது. ஆனால், இதை இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக வழங்கியது.
சீனாவின் யுவான் கரன்சி நோட்டுகள் ரூ.70 கோடி மதிப்பில் ஒரு மேஜையில் பரப்பி வைக்கப்பட்டன. இங்கு ஊழியர்களை வரவழைத்து, 15 நிமிடத்தில் முடிந்த அளவு பணத்தை எண்ணி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஓர் ஊழியர் கொடுக்கப்பட்ட நேரத்தில் அதிகபட்சமாக 1 லட்சம் யுவானை எண்ணினார். இதன் இந்திய மதிப்பு ரூ.12.07 லட்சம். இந்த காணொளி சமூக ஊடகத்தில் விரைவாகப் பரவியுள்ளது.
சீன நிறுவனம் ஊக்கத்தொகை வழங்கிய விதத்தைச் சிலர் பாராட்டியுள்ளனர், சிலர் விமர்சித்துள்ளனர்.
|
||||||||
by hemavathi on 02 Feb 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|