LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- இந்திய சாதனைத் தமிழர்கள்

மேற்கு வங்கத்தில் ஆட்சிப்பணி அதிகாரியாகிச் சாதித்த திண்டுக்கல் தமிழ் ஓவியா


திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த தமிழ் ஓவியா தன் அயராத உழைப்பால் மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சிப்பணி அதிகாரியாகப் பொறுப்பேற்றுச் சாதித்திருக்கிறார். 


திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன். இவரது மகள் தமிழ் ஓவியா தோட்டக்கலைத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை கல்லூரியில் படிப்பை முடித்த தமிழ் ஓவியா, பழனியில் உள்ள கனரா வங்கியில் உதவி  வேளாண்மை கள அலுவலராகப்  பணியில் சேர்ந்து ஓராண்டு  பணியாற்றினார். 


இந்நிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி  ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த தமிழ் ஓவியா, கனரா வங்கியில் பணியாற்றிக்கொண்டே முதன்மைத் தேர்வுக்குத் தயாராகி உள்ளார். அதில் தேர்ச்சி பெற்றதை அடுத்து, பிரதானத்  தேர்வுக்கான பயிற்சியை சென்னையில் பெற வேண்டி இருந்ததால் தனது வங்கிப் பணியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமும் ஐ.ஏ.எஸ். பிரதான தேர்வுக்குத் தன்னை தயார் படுத்தி  வந்தார். 


தமிழ் ஓவியாவின்  தொடர் முயற்சி அவரை ஐ.ஏஸ்.எஸ். தேர்வில் மேற்குவங்க கேடரில் தேர்ச்சி பெற வைத்தது. இதையடுத்து முசோரியில் . பயிற்சியை முடித்த அவர்,  மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சவுத் 22 பர்கானா என்ற மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பொறுப்பேற்றார். தற்போது ஹூக்ளி மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி தகுதியிலான மாவட்ட நில சீர்திருத்த அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். 


திண்டுக்கல்லில் பிறந்து தன் விடா முயற்சியால் ஆட்சிப்பணி அதிகாரியாகிச் சாதித்திருக்கும் தமிழ் ஓவியாவுக்கு வலைத்தமிழின்  மனமார்ந்த வாழ்த்துகள்!    


by   on 25 Feb 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா அவர்களின் சிம்பொனி 2025 இசைக்கோர்வை அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள்! இளையராஜா அவர்களின் சிம்பொனி 2025 இசைக்கோர்வை அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள்!
சென்னையில் பிறந்த பெண்ணுக்கு  கிராமி விருது சென்னையில் பிறந்த பெண்ணுக்கு கிராமி விருது
புதுச்சேரி தவில் இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது புதுச்சேரி தவில் இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்
தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள் தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்
சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி
கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.