|
||||||||
சென்னையிலிருந்து பினாங்குவுக்கு நேரடி விமானச் சேவை |
||||||||
![]()
சென்னை - பினாங்கு நேரடி விமானச் சேவையை இண்டிகோ விமானச்சேவை விமானம் தொடங்கியுள்ளது. மலேசியா நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு மாநிலமான பினாங்குவுக்குப் பல்வேறு நாடுகளிலிருந்து நேரடி விமானச் சேவை இயக்கப்படுகிறது.
அங்குத் தமிழர்கள் அதிகம் வசித்தாலும், இந்தியாவிலிருந்து நேரடி விமானச் சேவை இல்லாமல் இருந்தது. இந்தியாவிலிருந்து, குறிப்பாக சென்னையிலிருந்து பினாங்குவுக்கு நேரடி விமானச் சேவை இயக்க வேண்டும் என்று தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை - பினாங்கு - சென்னை இடையே தினசரி நேரடி விமானச் சேவையை இண்டிகோ விமானச்சேவை நிறுவனம் டிசம்பர் 21ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து அதிகாலை 2.15 மணிக்குப் புறப்படும் இண்டிகோ விமானச்சேவை பயணிகள் விமானம் காலையில் பினாங்கு தீவுக்குச் செல்லும். பின்னர், பினாங்கிலிருந்து காலையில் புறப்படும் விமானம் காலை 10.35 மணிக்கு சென்னை வந்தடையும்.
இந்த விமானம், 186 பேர் பயணிக்கக் கூடிய ஏர் பஸ் 320 ரகத்தைச் சேர்ந்தது. சென்னை - பினாங்கு இடையே பயண நேரம் சுமார் 4 மணி 30 நிமிடங்கள் ஆகும். சென்னையிலிருந்து பினாங்குவுக்கும், பினாங்கில் இருந்து சென்னைக்கும் தலா ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, சென்னையிலிருந்து பினாங்கு செல்ல வேண்டும் என்றால், மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்று, அங்கிருந்து பினாங்கு செல்ல வேண்டும். இதனால், அதிக நேரம் ஆகும். 2025-ம் ஆண்டு ஜனவரியில் பினாங்கில் 8-வது ஆண்டாக மாநாடு, கண்காட்சி, சாலைக்காட்சி நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதனைக் கண்டுகளிக்கத் தமிழர்கள் பினாங்கு வந்து செல்வதற்கு இந்த நேரடி விமானச் சேவை பெரிய உதவியாக இருக்கும்.
|
||||||||
by hemavathi on 23 Dec 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|