LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வளைகுடா நாடுகள்

ஹஜ் புனிதப் பயண விசா முறையில் அதிரடி மாற்றங்கள் - குழந்தைகளுக்குத் தடை

 

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். இதனால் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்தியாவிலிருந்தும் ஏராளமான இஸ்லாமியர்கள் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் ஹஜ் புனிதப் பயண விசா முறையில் சவுதி அரேபிய அரசு பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது. அதிகக் கூட்ட நெரிசல் காரணமாக ஏற்படும் பாதுகாப்பு பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு சவூதி அரேபிய அரசு 2025 ஹஜ் பயணத்தில் குழந்தைகள் பங்கேற்கத் தடை விதித்துள்ளது. மேலும் முதல் முறையாக யாத்ரீகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.


"குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், ஹஜ் யாத்திரையின் போது ஏற்படக்கூடிய எந்தவொரு தீங்கையும் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு முதல் முறையாகச் செல்லும் யாத்ரீகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


2025 ஆம் ஆண்டு ஹஜ் பருவத்திற்கான பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. சவுதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் Nusuk செயலி அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் தகவல்களைச் சரிபார்த்து, தங்களுடன் பயணம் செய்பவர்கள் குறித்தும் பதிவு செய்ய வேண்டும்.


இந்நிலையில் சவுதி அரேபிய அரசு தனது விசா கொள்கையில் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 1 முதல், இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் சிங்கிள் நுழைவு விச்சாக்கலுக்கு மட்டுமே தகுதியுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான அங்கீகாரம் இல்லாமல் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் நடைமுறையைக் கட்டுப்படுத்துவதே இந்த மாற்றத்தின் நோக்கம் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.


ஹஜ் காலத்தில் சவுதி அரேபியாவிற்குப் பல நுழைவு விசாக்களை வைத்திருக்கும் பலர் நாட்டிற்குள் நுழைந்து பதிவு செய்யாமலேயே புனித யாத்திரைக்குச் செல்கிறார்கள் என்றும் இதன் விளைவாக, ஹஜ்ஜின் போது புனித யாத்திரைத் தலங்கள் மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த புதிய விசா விதி அல்ஜீரியா, பங்களாதேஷ், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈராக், ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, பாகிஸ்தான், சூடான், துனீசியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்குப் பொருந்தும்.


இதனால் இந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகளைப் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. சில நாடுகளிலிருந்து சுற்றுலா, வணிகம் மற்றும் குடும்ப வருகைகளுக்கான ஒரு வருடப் பல-நுழைவு விசாக்களை சவுதி அரசாங்கம் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது. புதிய விதியின் கீழ், இந்த நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் ஒற்றை-நுழைவு விசாவிற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

by hemavathi   on 18 Feb 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்ததால் நிதி நெருக்கடி - 10,000 பேரைப் பணி நீக்கம் செய்த கனடா கல்வி நிறுவனங்கள் இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்ததால் நிதி நெருக்கடி - 10,000 பேரைப் பணி நீக்கம் செய்த கனடா கல்வி நிறுவனங்கள்
"சிங்கப்பூரோடு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது" - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
2026 முதல் எச் 1 பி விசா கட்டணம் 40 ஆயிரமாக அதிகரிப்பு 2026 முதல் எச் 1 பி விசா கட்டணம் 40 ஆயிரமாக அதிகரிப்பு
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருள்களுக்கு 35 சதவிகித வரி -  ஆகஸ்ட் 1  முதல் அமலுக்கு வரும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருள்களுக்கு 35 சதவிகித வரி - ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்
இந்தியாவுடன் விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் - டொனால்டு ட்ரம்ப் இந்தியாவுடன் விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் - டொனால்டு ட்ரம்ப்
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் குன்றக்குடி அடிகளார் - நல்லகண்ணு நூற்றாண்டு விழா வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் குன்றக்குடி அடிகளார் - நல்லகண்ணு நூற்றாண்டு விழா
ஐக்கிய அரபு அமீரகத்துக்கான தங்க விசா பெறுவது எப்படி? ஐக்கிய அரபு அமீரகத்துக்கான தங்க விசா பெறுவது எப்படி?
பிரமதர் நரேந்திர மோடிக்குக் கானாவின் தேசிய விருது பிரமதர் நரேந்திர மோடிக்குக் கானாவின் தேசிய விருது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.