'தமிழ் வழிக்கல்வி கனவிற்கு எவ்வித தடையாகவும் இருக்கவில்லை' இந்தியக் குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ள ஏஞ்சலின் ரெனிட்டா
ஒன்றிய பொதுப்பணிகள் ஆணையம் IAS,IPS போன்ற குடிமைப் பணிகளுக்கான(UPSC) முடிவை வெளியிட்டிருந்தது. தேர்வான 685 நபர்களில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியினைச் சேர்ந்த ஏஞ்சலின் ரெனிடாவும் ஒருவர். ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் வேளாண்மை மற்றும் நீர்பாபாசன பொறியியல் படித்து பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கத்தினையும் பெற்றுள்ளார்.
IAS ஆக விரும்புவதற்கான காரணத்தினை வினவும் போது, சுனாமியால் தங்கள் பகுதி பாதிப்படைந்த போது அப்போது அங்கு மாவட்ட ஆட்சியராளராக இருந்தவர் மீட்பு பணிகளில் துடிப்புடன் செயல்பட்டு மக்களுக்கு உதவியது தன்னைக் கவர்ந்ததாக கூறுகிறார்.
மேலும் தான் தமிழ் வழியில் கற்றது குடிமைப் பணி தேர்வில் வெல்ல தனக்கு எவ்விதத்திலும் தடையாக இல்லை எனவும் திட்டமிட்டு கல்லூரியில் படிக்கும் போதே தேர்வுக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் ஏஞ்சலின் ரெனிடா.
|