LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு

இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரித்துள்ளதாக பவுண்ட்இட் (foundit) அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


2025-ம் ஆண்டில் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையானது மகளிர் வேலைவாய்ப்புக்கானதாக இருக்கும். இந்த ஆண்டில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரித்துள்ளது. மேலும், படித்துவிட்டு உடனடியாக வேலையில் சேரும் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.


குறிப்பாக, மாநிலங்களில் தலைநகருக்கு அடுத்தபடியாக உள்ள இரண்டாவது, 3-ஆவது நிலை நகரங்களில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் (ஐடி), வங்கி, நிதிச்சேவைகள், காப்பீடு, உற்பத்தி, சுகாதார நலம், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துறை போன்றவற்றில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.


படித்து முடித்துவிட்டு உடனடியாக வேலையில் சேருவோருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. ஐடி, மனித வளம், சந்தைப்படுத்தல் துறைகளில் வளர்ந்து வளர்ந்து வரும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அதிக அளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.


மகளிர் வேலைவாய்ப்புகளில் 34 சதவீதத்தைக் கொண்ட ஐடி, கணினிகள், மென்பொருள் போன்ற தொழில்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. அதேபோல் விளம்பரம்,மக்கள் தொடர்பு, நிகழ்ச்சிகள் நடத்துதல், பிஎஃப்எஸ்ஐ போன்ற துறைகளிலும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

 
இதுகுறித்து பவுண்ட் இட் அமைப்பின் துணைத் தலைவர் (சந்தைப்படுத்தல்) அனுபமா பீம் ராஜ்கா கூறும்போது, “இந்திய வேலைவாய்ப்பு சந்தை வளர்ந்து வருகிறது. குறிப்பாக உயர் வளர்ச்சியடைந்து வரும் தொழில்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பெண்களுக்கு அதிக அணுகல் மற்றும் வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

அலுவலகத்திலிருந்து வேலை செய்யும் பணிகள் 55% அதிகரித்துள்ளது. ஊதியத்தில் சமத்துவம். பணி முறையில் விருப்பங்கள் போன்ற பிரிவுகளில் சவால்கள் நீடித்தாலும், 2025-ம் ஆண்டு வேலைவாய்ப்பில் மகளிர் பணியாளர் பங்கேற்புக்கான ஒட்டு மொத்தக் கண்ணோட்டம் மிகவும் ஊக்கம் அளிக்கிறது” என்றார்.

 

 

 

by hemavathi   on 05 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது... அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது...
உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம் உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம்
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி
இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது! இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.