|
|||||
இசைப்புலவர் இணையதளம் மற்றும் தமிழ்ப்புலவர் தளத்தின் மூலநிரல்கள் வெளியீடு |
|||||
கடந்த 10.01.2020 மாலை 04.00 மணியளவில் சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் அரங்கில், தமிழுக்கான "தமிழ் விழா" மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதில், மென்பொருள் ஆய்வாளரும், மென்பொருள் வடிவமைப்பாளருமான திருமிகு. துரைப்பாண்டி அவர்களின் இசைப்புலவர் தளத்தினை (www.isaipulavar.in) பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தரும், இந்நாள் உலகத் தமிழ் இணையச் சங்கத்தின் தலைவருமான முனைவர். திருமிகு. பொன்னவைக்கோ ஐயா அவர்கள் வெளியிட்டுத் தலைமையுரை ஆற்றினார். அடுத்து, அன்னாரின் தமிழ்ப்புலவர் (www.Tamilpulavar.org) தளத்தின் மூலநிரல்கள் அனைத்தையும் மக்கள் பயன்பாட்டுக்காக (open source) த.உதயச்சந்திரன் I.A.S (த.நா.தொல்லியல்துறை ஆணையர்) அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். மேலும், முதன்முதலாகத் தமிழ் எழுத்துருக்கள் (unicode) அனைத்தும் மக்கள் பயன்பாட்டுக்காக open source இல் வெளியிடப்பட்டன. தொடர்ந்து, திரு. ஆபிரஹாம் பண்டிதரின் பெயர்த்தி முனைவர்.திருமதி.அமுதாபாண்டியன் அவர்களின் "கருணாமிர்தசாகரம்" எனும் சுருக்கத் திரட்டு நூலினை இசைப்பேரறிஞர். முனைவர் அரிமளம் சு.பத்மநாபன் ஐயா அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அந்நூலினைப் பெற்றுக்கொண்ட வணிக வரித்துறை இணை இயக்குநர் திரு.பா.தேவேந்திர பூபதி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து, அரிமளம் பத்மநாபன் ஐயா அவர்களுக்கு அவரது தமிழிசைப் பணிகளைப் பாராட்டி, "தமிழிசைப் பேரறிஞர்" எனும் விருது வழங்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்ப்பட்டார். அதனைத்தொடர்ந்து, ஐயா. திரு.கணியன்பாலன் அவர்கள் எழுதிய "பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்" எனும் புத்தகத்தினை திரு.கோ.பாலச்சந்திரன் I.A.S (பணி நிறைவு) அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அதனைப் பெற்றுக்கொண்டு, தமிழ் மொழியுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர். திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக, திருப்பூர் வழக்கறிஞரும், எழுத்தாளருமான திருமதி.இரா.சுகுணாதேவி. எம்.ஏ.பி.எல்; அவர்களின் நன்றியுரையுடன் தமிழுக்கான "தமிழ் விழா" இனிதே நிறைவு பெற்றது.
திருப்பூர் சுகுணாதேவி |
|||||
by Swathi on 10 Feb 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|