LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உறை கிணற்றில் பொறிக்கப்பட்டுள்ள மீன் சின்னம்

உறை கிணற்றில் பொறிக்கப்பட்டுள்ள மீன் சின்னம்

கீழடியில் தொடர்ந்து அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன. சிறந்த நாகரிகம் கொண்ட தமிழர் வாழ்ந்த பகுதியாக கீழடி இருந்துள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது. நாகரிகச் சிறப்பு மற்றும் வணிகம் ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லும் ஆயிரக்கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ள கீழடியில் தற்போது மீன் சின்னம் பொறிக்கப்பட்ட உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் இதுவரை ஏழு கட்ட  அகழாய்வுகள் நடந்துள்ளன. அமைச்சர் தங்கம் தென்னரசு உறை கிணற்றில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதை பெருமிதத்தோடு தெரியப்படுத்தியுள்ளார்.

இணை இயக்குனர் சிவானந்தம் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஏழாம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் பொதுமக்கள் பார்வையிட திறந்தவெளி அகழ் வைப்பகமாக ஏற்படுத்தப்படும். அகழாய்வு குழிகள் திறந்த நிலையில் வைப்பது இதுவே முதன் முறை.இவை பார்வைக்கு வைக்கப்படும் போது கட்டுமானங்களை பாதுகாப்பதற்கான தொழில்நுட்பம் சென்னை ஐஐடி மூலமாக ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார். 

மணற்பாங்கான இடத்தில் தோண்டும் போது மணல் சரிந்து விழாதிருக்க சுடுமண் கொண்டு வளையம் அமைத்து கிணறு அமைத்துள்ளனர் தமிழர்கள்.   பட்டினப்பாலை போன்ற இலக்கியங்களில் உறை கிணறு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 'உறைகிணற்று புறச்சேரி' என பட்டினப்பாலை நூல் உறை கிணறு பற்றி கூறுகிறது. இப்போது கிடைத்துள்ள இந்த உறை கிணறு சங்க காலத் தமிழர் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக பயன்படுத்துவதாக இருந்துள்ளது.

by R.Gnanajothi   on 24 Oct 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.