ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எலும்புகள்!
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் தலை,தாடை,கை,கால் முதுகு எலும்புகள் உள்ள முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள் மத்திய தொல்லியல் துறையினால்,மண்டல இயக்குனர் அருண்ராஜ் அவர்கள் தலைமையில் 2021,செப்டம்பர் அன்று துவங்கி எட்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கூறுகியுள்ளார்.
இங்கு 70-க்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. மேலும் தங்கத்தாலான காதணி, சங்ககால வாழ்விடப் பகுதி, சங்ககால நாணயம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சுண்ணாம்பால் அமைக்கப்பட்டிருந்த தரைத்தளம், செங்கலால் கட்டப்பட்ட சுவர் ஆகியவையும் அகழாய்வில் கண்டறியப்பட்டது.
இப்போது 3200 ஆண்டுகள் பழமையான இரு முதுமக்கள் தாழிகளில் இருந்து மனிதனின் அனைத்து எலும்பு பகுதிகளும் கிடைத்துள்ளன. இதனால் தொல்லியல் ஆய்வாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அகழாய்வில் கிடைத்துள்ள பற்கள் மரபணு பகுபாய்விற்காக மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
|