LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்க அதிபர் பதவியேற்பு - இந்தியாவுக்கு முக்கியத்துவம்

அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (NSA) வால்ட்ஸ் ஆகியோரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர் அந்நாட்டின் புதிய அமைச்சர் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் இந்தியா நடத்திய முதல் சந்திப்பு இதுவாகும்.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முன்வரிசையில் முதலிடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள டிரம்ப், உலக நாடுகளை அதிர வைக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களைத் திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி இருக்கிறது.

இந்த நிலையில் டிரம்ப் அதிபராகப் பங்கேற்ற பின்னர் சர்வதேச அமைப்பான குவாட்-ன் வெளியுறவு அமைச்சர்கள் உச்சி மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது, குவாட் அமைப்பை மேலும் வலுவானதாக உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.

மேலும் அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வால்ட்ஸ் ஆகியோரையும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

 

by hemavathi   on 23 Jan 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்கக் கச்சா எண்ணெய்க்கு 10% , நிலக்கரிக்கு 15%  வரி -  சீனா  பதிலடி அமெரிக்கக் கச்சா எண்ணெய்க்கு 10% , நிலக்கரிக்கு 15% வரி - சீனா பதிலடி
வரும் 13-ம் தேதி அமெரிக்க அதிபர்  ட்ரம்ப்பை- இந்திய பிரதமர் மோடி சந்திப்பு வரும் 13-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை- இந்திய பிரதமர் மோடி சந்திப்பு
சவுதி அரேபியாவில் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வு சவுதி அரேபியாவில் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வு
கூடுதல் வரி விதிப்பு, கிரீண்ட்லேண்-பனாமா விவகாரம் - ட்ரம்ப் அறிவிப்பால் பதற்றமாகும் நாடுகள்! கூடுதல் வரி விதிப்பு, கிரீண்ட்லேண்-பனாமா விவகாரம் - ட்ரம்ப் அறிவிப்பால் பதற்றமாகும் நாடுகள்!
ஊழியர்களுக்கு 70 கோடி ஊக்கத்தொகை வழங்கிய சீன நிறுவனம் ஊழியர்களுக்கு 70 கோடி ஊக்கத்தொகை வழங்கிய சீன நிறுவனம்
அமெரிக்காவில் விசா காலம் முடிந்தபிறகும் தங்கியிருக்கும் 7000 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் விசா காலம் முடிந்தபிறகும் தங்கியிருக்கும் 7000 இந்திய மாணவர்கள்
அமெரிக்க முன்னணி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியப் பெண் அமெரிக்க முன்னணி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியப் பெண்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் 'தமிழ் அறிவு வளாக'த்துக்கு சாஸ்தா தமிழ்ச்சங்க இயக்குநர் ராமன் வேலு பங்களிப்பு! ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் 'தமிழ் அறிவு வளாக'த்துக்கு சாஸ்தா தமிழ்ச்சங்க இயக்குநர் ராமன் வேலு பங்களிப்பு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.